உ.பி.யில் ஐ.எஸ். தீவிரவாதி என்கவுண்டரில் சுட்டுக்கொலை.. போலீஸ் அதிரடி வேட்டை!
போலீசாரின் அதிரடி வேட்டையில் ஐ.எஸ்.இயக்கத்துடன் தொடர்புடைய ஒருவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
லக்னோ: மத்திய பிரதேச ரயில் விபத்தில் தொடர்புடைய ஐ.எஸ். தீவிரவாதியை உத்தரபிரதேச போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.
மத்தியப்பிரதேசத்தில் போபால் - உஜ்ஜைனி பயணிகள் ரயிலில் நேற்று காலை பலத்த சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதில் 9 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பின்னர் குண்டுவெடிப்பு நடந்த இடத்துக்கு வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து சென்று அந்த பெட்டியை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கேட்பாரின்றி ஒரு சூட்கேஸ் கிடந்தது.

அதில் சிறிய அளவிலான வெடிகுண்டுகள் எடுத்து வந்ததற்கான தடயம் சிக்கியது. இதையடுத்து, புலனாய்வு துறையினரின் உதவியுடன் மத்திய பிரதேச போலீசார் ரயிலில் குண்டு வைத்தவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த தேடுதல் வேட்டையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சந்தேகிக்கப்படுகிற ஒருவர் உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் கைது செய்யப்பட்டார்.

இதில் தொடர்புடைய மற்றொருவர், ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த தீவிரவாதி என சந்தேகிக்கப்படுகிற முகமது சைபுல் என தெரிய வந்துள்ளது. லக்னோ நகரில் கஞ்ச் குடியிருப்பு பகுதியின் ஹஜி காலனியின் ஒரு வீட்டு கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக தீவிரவாத தடுப்பு படை போலீஸ் கமாண்டோக்களுக்கு மத்திய புலனாய்வு முகமையிடம் இருந்து ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவனை உயிருடன் பிடிக்க தீவிரவாத தடுப்பு போலீஸ் கமாண்டோக்கள் சுமார் 20 பேர் நேற்று பிற்பகல் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அவனை சரணடையும் படியும் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். முகமது சைபுல் தங்கியுள்ள வீட்டின் கதவையும் கதவை போலீஸ் கமாண்டோக்கள் தட்டினர்.
ஆனால் அறையின் கதவை அவன் திறக்கவில்லை. அவன் சரணடைய மறுத்ததோடு போலீசார் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்தான். அவனை வெளியே கொண்டு வருவதற்காக அந்த கட்டிடத்திற்குள் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். இது தவிர அவனை உயிரோடு பிடிக்க வேண்டும் என்பதற்காக மிளகாய் பொடி குண்டையும் போலீசார் வீசினார்கள். இருப்பினும் அவன் வெளியே வரவில்லை. தொடர்ந்து போலீசாருக்கும் தீவிரவாதிக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் முகமது சைபுல், இரவு 8.30 மணி அளவில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஐ.எஸ். இயக்கத்துடன் முகமது சைபுல்லுக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications