புற்று நோயுடன் போராடிய 14 வயது சிறுவன் சந்தனம் மரணம்
பெங்களூரு: சந்தன். 14 வயதேயான இளம் போராளி. புற்று நோயுடன் போராடி வந்த இந்த சிறுவன் இன்று மாலை தனது போராட்டத்தை முடித்துக் கொண்டான், மரணத்தைத் தழுவினான்.
இந்திய விமானப்படை மீது மிகுந்த பிரியமும், அன்பும், ஏன் பக்தியும் வைத்திருந்தன சிறுவன் சந்தன். புற்றுநோய் முற்றிய நிலையில் உயிருக்குப் போராடி வந்த சந்தனின் மூச்சு இன்று மாலை நின்று போனது.
பீகாரைச் சேர்ந்தவன் சந்தன். டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான அறிவியல் கழக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. புற்றுநோய் முற்றிய நிலையில் மிகவும் கவலைக்கிடமாக இருந்த வந்த சந்தனுக்காக லட்சக்கணக்கானோர் சமூக வலைதளங்களில் பிரார்த்தனைகளை முன்னெடுத்து வந்தனர்.

சந்தனின் நிலை குறித்து அறிந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் சோகமடைந்தார். தனது டிவிட்டர் பக்கத்தில் சந்தனுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கோரி செய்தி போட்டார். இதுகுறித்து கலாம் எழுதிய டிவிட்டில், "இளம் விமானி சந்தன் குறித்த செய்தியைப் படித்து வேதனையுற்றேன். அவனது நலனுக்காக அனைவரும் பிரார்த்திப்போம் என்று கூறியிருந்தார் கலாம்.
அவரது டிவிட்ட பல்லாயிரக்கணக்கில் ரீடிவீட் செய்யப்பட்டது. அனைவரும் சந்தனுக்காக பிரார்த்தித்தனர். ஆனால் அது நிராசையாகிப் போனது. இன்று மாலை சந்தன் மரணமடைந்தான். சந்தனின் மரணத்தை அவரது தந்தை கிரிஷ் மண்டல் உறுதி செய்துள்ளார். சந்தன் மரணமடைந்து விட்டான். அவனது உடலை பீகாருக்கு எடுத்துச் செல்கிறோம். அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும். சந்தனுக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் நான் நன்றி கூறிக் கொள்கிறேன் என்று கிரிஷ் மண்டல் கூறியுள்ளார்.

சந்தனின் மறைவுக்கு இந்திய விமானப்படையின் தலைவர் ஏர் சீப் மார்ஷல் அரூப் ரஹாவும் இரங்கல் தெரிவித்துள்ளார். உண்மையான போராளியாக திகழ்ந்த சந்தன் நம் அனைவரையும் கவர்ந்து விட்டான் என்று புகழாரம் சூட்டியுள்ளார் ரஹா.
சந்தனுக்கு நிறைய கனவுகள்.. அதில் ஒன்று. சொந்தமாக ஒரு விமானம் வாங்குவது என்பது. அந்தக் கனவை சமீபத்தில் பெங்களூரு ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சியின் இயக்குநர் பி.எஸ்.சுப்பிரமணியம் நிறைவேற்றி வைத்தார். சந்தனுக்காக கம்பீரமான தேஜாஸ் விமானத்தின் மாதிரியை அனுப்பி வைத்தார் சுப்பிரமணியம் என்பது நினைவிருக்கலாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications