நான் ஒன்றும் மல்லையா போல நாட்டை விட்டு ஓடிப்போகவில்லை : சோனியாகாந்தி மருமகன் காட்டம்
தான் ஒன்றும் மல்லையா போல நாட்டை விட்டு ஓடிப்போகவில்லை என்று ராபர்ட் வதோரா தெரிவித்து உள்ளார்
டெல்லி : அரசியல் காரணங்களுக்காகவே தான் பழி வாங்கப்பட்டதாகவும், மல்லையா போல நாட்டை விட்டு ஓடிப்போகவில்லை என்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதோரா தெரிவித்து உள்ளார்.
கிங் பிஷர் நிறுவன உரிமையாளர் விஜய் மல்லையா மீது ஏகப்பட்ட ஊழல் புகார்கள் உள்ளது. வங்கிகள் பல்லாயிரம் கோடி கடன் வாங்கிவைத்துவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் லண்டனில் பதுங்கி இருக்கிறார் என்று அவர் மீது இந்திய அரசு குற்றம்சாட்டி உள்ளது.

லண்டனில் இருக்கும் மல்லையாவை இந்தியா கொண்டு வந்து விசாரிக்க அனுமதி கோரும் வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. அதில் நேற்று ஆஜரான விஜய் மல்லையா, 'தற்போதைய அரசால் அரசியல் காரணங்களால் நான் பழிவாங்கப்படுகிறேன். இதுபோல ஹிமாச்சல் முதல்வர் வீரபத்ர சிங், சோனியா காந்தி மருமகன் வதோரா ஆகியோர் பழிவாங்கப்பட்டுள்ளார்கள்' என்று லண்டன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராபர்ட் வதோரா, ' எனது பெயரை சிலர் அவதூறாக பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது விஜய் மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் பயன்படுத்தி இருக்கிறார். அவருக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கப்பட்டவன் தான்.

ஆனால், மல்லையா போல வங்கிப் பணத்தைக் கையாடல் செய்துவிட்டு, அதை சமாளிக்க வெளிநாடுகளில் போய் அமர்ந்துகொள்ளவில்லை. இந்திய நீதித்துறை மீது நம்பிக்கை இருக்கிறது. அதுபோல, மல்லையாவும் வெளிநாடுகளில் பதுங்காமல் இந்தியா வந்து நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளவேண்டும். அதுபோல, மக்களின் வரிப்பணத்தை திரும்ப செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றும் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications