நான் ஒன்றும் மல்லையா போல நாட்டை விட்டு ஓடிப்போகவில்லை : சோனியாகாந்தி மருமகன் காட்டம்
தான் ஒன்றும் மல்லையா போல நாட்டை விட்டு ஓடிப்போகவில்லை என்று ராபர்ட் வதோரா தெரிவித்து உள்ளார்
டெல்லி : அரசியல் காரணங்களுக்காகவே தான் பழி வாங்கப்பட்டதாகவும், மல்லையா போல நாட்டை விட்டு ஓடிப்போகவில்லை என்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதோரா தெரிவித்து உள்ளார்.
கிங் பிஷர் நிறுவன உரிமையாளர் விஜய் மல்லையா மீது ஏகப்பட்ட ஊழல் புகார்கள் உள்ளது. வங்கிகள் பல்லாயிரம் கோடி கடன் வாங்கிவைத்துவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் லண்டனில் பதுங்கி இருக்கிறார் என்று அவர் மீது இந்திய அரசு குற்றம்சாட்டி உள்ளது.

லண்டனில் இருக்கும் மல்லையாவை இந்தியா கொண்டு வந்து விசாரிக்க அனுமதி கோரும் வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. அதில் நேற்று ஆஜரான விஜய் மல்லையா, 'தற்போதைய அரசால் அரசியல் காரணங்களால் நான் பழிவாங்கப்படுகிறேன். இதுபோல ஹிமாச்சல் முதல்வர் வீரபத்ர சிங், சோனியா காந்தி மருமகன் வதோரா ஆகியோர் பழிவாங்கப்பட்டுள்ளார்கள்' என்று லண்டன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராபர்ட் வதோரா, ' எனது பெயரை சிலர் அவதூறாக பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது விஜய் மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் பயன்படுத்தி இருக்கிறார். அவருக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கப்பட்டவன் தான்.

ஆனால், மல்லையா போல வங்கிப் பணத்தைக் கையாடல் செய்துவிட்டு, அதை சமாளிக்க வெளிநாடுகளில் போய் அமர்ந்துகொள்ளவில்லை. இந்திய நீதித்துறை மீது நம்பிக்கை இருக்கிறது. அதுபோல, மல்லையாவும் வெளிநாடுகளில் பதுங்காமல் இந்தியா வந்து நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளவேண்டும். அதுபோல, மக்களின் வரிப்பணத்தை திரும்ப செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றும் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
-
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications