இங்கு இந்திக்கு இடமில்லை.. ஒரே போடாகப் போட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம்
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இந்தியில் மனுக்களைத் தாக்கல்செய்யக் கூடாது. ஆங்கிலம் மட்டுமே அனுமதிக்கப்படும் என தீர்ப்பாயம் கூறியுள்ளது.
டெல்லி: தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இந்திக்கு இடமில்லை. ஆங்கிலம் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தீர்ப்பாயம் அதிரடியாக அறிவித்துள்ளது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் விதி 33ன் கீழ், தீர்ப்பாயத்தின் நடவடிக்கைகள் அனைத்துமே ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டும். எனவே இங்கு இந்திக்கு இடமில்லை என்றும் தீர்ப்பாயம் சுட்டிக் காட்டியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓஜஸ்வி என்ற மதவாத கட்சி ஒன்று கடந்த 2015ம் ஆண்டு தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. அதில், கால்நடைகளை வெட்டுவதால் அதன் கழிவுகள் கலந்து யமுனை நதி மாசடைவதாகவும் அதைத் தடுத்து நிறுத்துமாறும் கோரியிருந்தது. இதுதொடர்பான மனுவை அது இந்தியில் தாக்கல் செய்திருந்தது.
இதைப் பரிசீலித்த தீர்ப்பாயம், மனு இந்தியில் உள்ளதாக கூறி டிஸ்மிஸ் செய்து விட்டது. மேலும் ஆங்கிலத்தில் மனுவை சமர்ப்பிக்குமாறும் அது அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து ஓஸ்வி கட்சி சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி யு.டி. சால்வி தலைமையிலான பெஞ்ச், இந்தி தேசிய மொழி என்ற கற்பனையில் மனுதாரர் மீண்டும் மீண்டும் ஆய்வு செய்யக் கோரி வருகிறார்.
இந்தி தேசிய மொழி அல்ல. தீர்ப்பாயத்திலும் இந்திக்கு இடமில்லை. இங்கு ஆங்கிலம் மட்டுமே ஆட்சி மொழியாகும். எனவே ஆங்கிலத்தில் மட்டுமே மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர் பின்னர் தனது மனுவை இந்தியிலும் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருப்பதால் அதை ஏற்கிறோம். அதேசமயம், ஆங்கிலத்தில் இல்லாத பிற மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று அறிவித்தனர்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications