வெளிச்சத்துக்கு வந்த பாகிஸ்தான் வீக்னஸ்! இந்திய ஏவுகணைகளை தடுக்க முடியாமல் திணறல்! முழு நிர்மூலம்
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் உள்ளே இந்தியா ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த தாக்குதல் மூலம் பாகிஸ்தானின் மிகப்பெரிய வீக்னஸ் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பாதுகாப்பு துறையால் ஆபரேஷன் சிந்தூர் என்று இந்த தாக்குதலுக்கு பெயரிடப்பட்டு உள்ளது. இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தளங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடித்தியது இந்திய ராணுவம்.

அங்கு தீவிரவாத முகாமக்கள் மட்டும் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 9 இடங்களில் இந்த ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. பாகிஸ்தானின் அந்த மிகப்பெரிய வீக்னஸ் என்ன.. இது இந்தியாவிற்கு எப்படி சாதகமாக மாறி உள்ளது என்று இங்கே பார்க்கலாம்.
1. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு ஏர் ஸ்பேஸ் இருக்கும். அதாவது அந்த நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள வான்பகுதி.
2. இந்த பகுதிக்குள் எந்த ஒரு பொருள் நுழைந்தாலும் அது ரேடாரில் தெரியும்.
3. ரேடார் மூலம் இவை கண்காணிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.
4. உதாரணமாக இந்தியா உள்ளே பாகிஸ்தான் போர் விமானம் வந்தால் உடனடியாக இந்தியாவிற்கு தெரியும்.
5. இதை பார்த்து உடனே இந்தியா பதிலடியை தரலாம்.
6. ஆனால் பாகிஸ்தான் உள்ளே ஏற்கனவே இதற்கு முன் இந்தியா சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தி உள்ளது. விமானம் உள்ளே புகுந்து தாக்கி உள்ளது. ஆனால் அப்போதெல்லாம் பாகிஸ்தான் ரேடார் இதை கணிக்க தவறிவிட்டது.
7. ஏனென்றால் இந்திய ராணுவ போர் விமானம் மிக தாழ்வாக பறந்து கூட தாக்குதல்களை நடத்தியது.
8. இந்த முறை இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தளங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடித்தியது இந்திய ராணுவம். அங்கு தீவிரவாத முகாமக்கள் மட்டும் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
9. ஏவுகணைகள் உள்ளே சென்று தாக்கி உள்ளன. ஆனால் பாகிஸ்தானால் இதை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படியே கண்டுபிடித்தாலும் அதை மறித்து தடுக்க முடியவில்லை.
10. அதாவது இந்தியாவின் ஏவுகணைகளை மறித்து பாகிஸ்தானால் தாக்க முடியவில்லை. இது பாகிஸ்தானின் மிகப்பெரிய வீக்னஸ் ஆகும்.
11. பாகிஸ்தானால் இந்திய ஏவுகணைகளை ரேடாரில் காண முடியவில்லை. இல்லையென்றால் அப்படியே பார்த்தாலும் அதை தடுக்கும் திறன் இல்லை என்பது தெளிவாகி உள்ளது.
எங்கெல்லாம் தாக்குதல்
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் ஐந்து இடங்களில் இந்தியாவின் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
இந்த முறை இந்தியாவில் இருந்தே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அதாவது இந்தியாவிற்கு உள்ளே இருந்தே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அதாவது இந்தியாவில் இருந்தே ஏவுகணைகள் மூலம் 9 இடங்கள் தாக்கப்பட்டு உள்ளன. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடித்தியது இந்திய ராணுவம்.
அந்த இடங்கள் தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. கோட்லி, அகமதுபூர் கிழக்கு, முசாபராபாத், பாக் மற்றும் முரிட்கே ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளன. இவற்றில், அகமதுபூர் கிழக்கு மற்றும் முரிட்கே ஆகியவை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள இடங்கள் ஆகும்.












Click it and Unblock the Notifications