அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்.. காங்கிரஸ் மாநாட்டில் அதிரடி தீர்மானம்
அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்.. காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம்
டெல்லி: 2019 நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
தற்போது டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் 84வது மாநாடு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த மாநாடு இன்று மாலையுடன் முடிவடைகிறது.

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்ற பின் நடக்கும் முதல் கட்சி மாநாடு இதுவாகும். இந்த மாநாட்டில் இந்தியா முழுக்க இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
முதல் இரண்டு நாள் மாநாட்டில் முக்கியமான சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்த கூடாது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
ஒரே கருத்து கொண்ட கட்சிகள் பிரச்சனைகளை மறந்து ஒன்றாக நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. பாஜக கட்சியின் தொடர் வெற்றிகளை சமாளிக்க இதுவே ஒரே வழி என்று காங்கிரஸ் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
மாநாட்டில் இன்று, இன்னும் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது. கடைசியாக மாநாட்டு முடிவில் ராகுல் காந்தி பேச இருக்கிறார்.












Click it and Unblock the Notifications