ஏழுமலையானுக்கு ரூ 5.6 கோடிக்கு நகைகள் காணிக்கை.. வலுக்கும் எதிர்ப்பால் தெலுங்கானா முதல்வர் திணறல்
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் திருப்பதி கோவிலுக்கு 5.5கோடி ரூபாய்க்கு நகைகள் வழங்கியதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் திருப்பதி கோவிலுக்கு 5.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை நேற்று காணிக்கையாக வழங்கினார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தனி தெலுங்கானா மாநிலம் உதயமானால், திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.5 கோடியில் தங்க நகைகள் காணிக்கையாக வழங்குவதாக சந்திரசேகர ராவ் வேண்டி கொண்டார்.
இதையடுத்து தனித்தெலுங்கானா உருவாகி சந்திரசேகர ராவ் முதல்வராக பதவி ஏற்றவுடன், திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்தும் நகைகளுக்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.

தனி விமானங்களில் திருப்பதிக்கு பயணம்
தங்க நகைகள் செய்யும் பணி முடிவடைந்ததையடுத்து நேர்த்திக் கடனை நிறைவேற்ற திட்டமிட்ட சந்திரசேகரராவ், தனது குடும்பத்தினர், தெலுங்கானா அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஐதராபாத்தில் இருந்து 2 தனி விமானங்களில் நேற்று திருப்பதிக்கு வந்தனர்.

காணிக்கையாக வழங்கப்பட்ட நகைகள்
அங்கிருந்து கோவிலுக்கு சென்ற முதல்வர் சந்திரசேகர ராவ் தெலுங்கானா அரசு சார்பில் திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலரிடம் நகைகளை காணிக்கையாக வழங்கி வேண்டுதலை நிறைவேற்றினார்.

மக்களின் பணத்தில் காணிக்கையா?
சந்திரசேகர ராவ் மக்களின் பணத்தில் ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.5.5 கோடி நகைகளை காணிக்கையாக செலுத்தியதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மக்களின் பணத்தை மாநிலத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல் காணிக்கையாக செலுத்துவதா என்றும் கண்டனங்கள் எழுந்தன.

சந்திரசேகர ராவ்க்கு காங்கிரஸ் கண்டனம்
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான எம்.சசிதர் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சந்திரசேகர ராவ் தனது தனிப்பட்ட வேண்டுதலுக்காக மக்களின் பணத்தை பயன்படுத்தி காணிக்கை செலுத்துவது சரி அல்ல என்று அவர் கூறினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications