மதச்சார்பின்மையின் வல்லுனர்களாக எதிர்க்கட்சிகள் காட்டிக்கொள்கின்றன- ஓவைசி விளாசல்
அகமதாபாத்: பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமாரை கடுமையாக சாடிய அசாதுதீன் ஓவைசி, மதச்சார்பின்மையின் வல்லுனர்களாக எதிர்க்கட்சிகள் தங்களை காட்டிக்கொள்கின்றன என்றும் கூறினார்.
ஹைதராபாத் எம்.பியும் ஏ.ஐ.எம்.ஐ. எம் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஓவைசி குஜராத் மாநிலம் அகமதாபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
''மதச்சார்பின்மையின் வல்லுனர்களாக எதிர்க்கட்சிகள் தங்களை காட்டிக்கொள்கின்றன.

யார் வகுப்புவாதிகள்?
சிறுபான்மை சமுதாயத்தின் முன்னேற்றம் குறித்தும் அவர்களுக்கு நீதி கிடைப்பது குறித்தும் நாம் பேசினால் எங்களுக்கு எதிராக முட்டாள்தனமாக பதில் வருகிறது. தங்களை மதச்சார்பின்மை நிபுணர்கள் போல காட்டிக்கொண்டு, யார் வகுப்புவாதிகள்? யார் மதச்சர்பின்மையாளர்கள் என்று முடிவு செய்வது போலித்தனமானது. அவர்களை தேசம் பார்த்து கொண்டு இருக்கிறது'' என்றார்.

8 வயது சிறுவன் கைது
முன்னதாக இன்று காலை ஓவைசி தனது ட்விட்டர் பதிவில் பீகார் முதல்வர் நிதீஷ் குமாரை கடுமையாக விமர்சித்து இருந்தார். ''பீகாரின் சிவன் பகுதியில் கலவரம் ஏற்பட காரணமாக இருந்ததாக கூறி 8 வயதே ஆன சிறுவனை போலீசார் கைது செய்துள்ளதாக விமர்சித்து இருந்தார். இதுதொடர்பாக ஓவைசி தனது ட்விட் பதிவில், ''புதிய 'மதச்சார்பற்ற சாச்சா' வான நிதிஷ் குமாரின் ஆட்சியில் குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை. கைகளை கயிற்றால் கட்டப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் சிறுவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.

இழப்பீடு கொடுக்க வேண்டும்
கலவரக்காரர்களை பிடிப்பதற்கு பதிலாக இஸ்லாமிய குழந்தைகளை போலீசார் குறிவைத்து செயல்படுகிறது. இந்த சம்பவத்திற்கு காரணமான போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும்'' என்றார். அடிக்கடி இடம் மாறிக்கொண்டு இருப்பதாக நிதிஷ்குமாரை மேலும் சாடிய ஓவைசி, ''பாஜகவுடன் இருந்தபோதே நிதீஷ்குமார் முதல்வரானார். கோத்ரா படுகொலையின் போது நிதீஷ் குமார் பாஜகவுடன் தான் இருந்தார்.

மம்தா பானர்ஜி
2015 ஆம் ஆண்டுதான் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறினார். மீண்டும் 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டு தேர்தல்களில் பாஜக கூட்டணிக்கு திரும்பி நரேந்திர மோடி வெற்றி பெற செய்தார். தற்போது பாஜகவை கைவிட்டுள்ளார்'' என்றார். மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாடு கொண்டவராக அறியப்படும் மம்தா பானர்ஜியையும் ஓவைசி விமர்சனம் செய்ய தவறவில்லை. மம்தா பானர்ஜியை சாடிய ஓவைசி, ''மம்தா பானர்ஜி இதற்கு முன்பு தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து இருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பாராட்டியும் இருக்கிறார்'' என்றார்.
-
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications