மதச்சார்பின்மையின் வல்லுனர்களாக எதிர்க்கட்சிகள் காட்டிக்கொள்கின்றன- ஓவைசி விளாசல்
அகமதாபாத்: பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமாரை கடுமையாக சாடிய அசாதுதீன் ஓவைசி, மதச்சார்பின்மையின் வல்லுனர்களாக எதிர்க்கட்சிகள் தங்களை காட்டிக்கொள்கின்றன என்றும் கூறினார்.
ஹைதராபாத் எம்.பியும் ஏ.ஐ.எம்.ஐ. எம் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஓவைசி குஜராத் மாநிலம் அகமதாபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
''மதச்சார்பின்மையின் வல்லுனர்களாக எதிர்க்கட்சிகள் தங்களை காட்டிக்கொள்கின்றன.

யார் வகுப்புவாதிகள்?
சிறுபான்மை சமுதாயத்தின் முன்னேற்றம் குறித்தும் அவர்களுக்கு நீதி கிடைப்பது குறித்தும் நாம் பேசினால் எங்களுக்கு எதிராக முட்டாள்தனமாக பதில் வருகிறது. தங்களை மதச்சார்பின்மை நிபுணர்கள் போல காட்டிக்கொண்டு, யார் வகுப்புவாதிகள்? யார் மதச்சர்பின்மையாளர்கள் என்று முடிவு செய்வது போலித்தனமானது. அவர்களை தேசம் பார்த்து கொண்டு இருக்கிறது'' என்றார்.

8 வயது சிறுவன் கைது
முன்னதாக இன்று காலை ஓவைசி தனது ட்விட்டர் பதிவில் பீகார் முதல்வர் நிதீஷ் குமாரை கடுமையாக விமர்சித்து இருந்தார். ''பீகாரின் சிவன் பகுதியில் கலவரம் ஏற்பட காரணமாக இருந்ததாக கூறி 8 வயதே ஆன சிறுவனை போலீசார் கைது செய்துள்ளதாக விமர்சித்து இருந்தார். இதுதொடர்பாக ஓவைசி தனது ட்விட் பதிவில், ''புதிய 'மதச்சார்பற்ற சாச்சா' வான நிதிஷ் குமாரின் ஆட்சியில் குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை. கைகளை கயிற்றால் கட்டப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் சிறுவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.

இழப்பீடு கொடுக்க வேண்டும்
கலவரக்காரர்களை பிடிப்பதற்கு பதிலாக இஸ்லாமிய குழந்தைகளை போலீசார் குறிவைத்து செயல்படுகிறது. இந்த சம்பவத்திற்கு காரணமான போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும்'' என்றார். அடிக்கடி இடம் மாறிக்கொண்டு இருப்பதாக நிதிஷ்குமாரை மேலும் சாடிய ஓவைசி, ''பாஜகவுடன் இருந்தபோதே நிதீஷ்குமார் முதல்வரானார். கோத்ரா படுகொலையின் போது நிதீஷ் குமார் பாஜகவுடன் தான் இருந்தார்.

மம்தா பானர்ஜி
2015 ஆம் ஆண்டுதான் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறினார். மீண்டும் 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டு தேர்தல்களில் பாஜக கூட்டணிக்கு திரும்பி நரேந்திர மோடி வெற்றி பெற செய்தார். தற்போது பாஜகவை கைவிட்டுள்ளார்'' என்றார். மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாடு கொண்டவராக அறியப்படும் மம்தா பானர்ஜியையும் ஓவைசி விமர்சனம் செய்ய தவறவில்லை. மம்தா பானர்ஜியை சாடிய ஓவைசி, ''மம்தா பானர்ஜி இதற்கு முன்பு தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து இருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பாராட்டியும் இருக்கிறார்'' என்றார்.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications