Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பணமதிப்பு நீக்கம் : நவ.8ல் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் - கருப்பு தினமாக அனுசரிப்பு

பணமதிப்பிழப்பு விவகாரத்தை கண்டித்து வரும் நவம்பர் 8ஆம் தேதி நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளன.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜக அரசுகொண்டு பணமதிப்பிழப்பு விவகாரத்தை கண்டித்து வரும் நவம்பர் 8ஆம் தேதி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. அன்றைய தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளன.

கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி திடீரென இரவு பிரதமர் நரேந்திர மோடி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் இனி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் இனி செல்லாது என்றும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள நோட்டுகளை தபால் நிலையங்களிலும், வங்கிகளும் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்தார்.

Opposition parties to protest on Nov.8 against demonetisation

மேலும் அவற்றை மாற்றுவதற்கும் கால அவகாசம் வழங்கப்பட்டது. இதனால் மக்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு வங்கி வாயில்களில் காத்திருந்தனர். இதனால் பணத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதற்கு பல்வேறு மாநிலங்கள் கண்டனம் தெரிவித்தும் அந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட வில்லை. மாறாக இந்த நடவடிக்கை கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக என்று மோடி தெரிவித்தார்.

இந்த பணமதிப்பிழப்பு விவகாரத்தால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் வரும் நவ.8ஆம் தேதியுடன் பணமதிப்பிழப்பு சம்பவம் ஏற்பட்டு ஓராண்டு நிறைவடைகிறது.

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ், திரிணமூலம் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் (சரத் யாதவ்) உள்ளிட்டோர் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். நவம்பர் 8ஆம் தேதியை கருப்புதினமாக அனுசரிக்கவும் எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+