காசியாபாத் எல்லையில் கனிமொழி, திருமாவளவன்...விவசாயிகளுக்கு நேரில் ஆதரவு
காசியாபாத் : காசியாபாத் எல்லை பகுதியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவிக்க தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் சென்றுள்ளனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை நேரில் சந்திப்பதற்காக பஞ்சாப் அமைச்சர் ஹர்சிம்ரட் கவுர் பாதல் தலைமையில் தமிழக அரசியல் கட்சிகளை சேர்ந்த திமுக எம்.பி.,க்கள் கனிமொழி, திருச்சி சிவா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் நடைபயணமாக சென்றுள்ளனர்.

இது பற்றி திருமாவளவன் கூறுகையில், இரண்டு மாதங்களுக்கு மேலாக புதுதில்லியில் போராடி வரும் விவசாயிகளை சந்திப்பதற்காக காசியாபாத் எல்லைக்கு சென்றுக் கொண்டிருக்கிறோம். பஞ்சாப் முன்னாள் அமைச்சர் ஹர்சிம்ரட் கவுர் பாதல் அவர்களின் முன்னெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் குழு விவசாயிகளை சந்திக்க செல்கிறோம்.
பாதிக்கப்பட்டுள்ள, போராடிக் கொண்டிருக்கிற மக்களை சந்திப்பதற்காக விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் நானும் (தொல்.திருமாவளவன்) தோழர் ரவிக்குமார் அவர்களும் செல்கிறோம் என்றார். காலை 9.30 மணி துவங்கி தொடர்ந்து அவர்கள் நடைபயணமாக சென்றுள்ளனர்.
அந்நியநாட்டு எல்லையொரத்தில் குவிக்கப்படுவதுபோல தில்லி எல்லையில் துணைஇராணுவத்தினர் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளார்கள்.
— Thol. Thirumavalavan (@thirumaofficial) February 4, 2021
மோடி அரசு மிகமோசமான முறையில் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கிவருகிறது பகைவர்களை அணுகுவதுபோல விவசாயக் குடிமக்களை அணுகுவது கண்டனத்துக்குரியது #FarmersProtest pic.twitter.com/irxx4PlGJV
இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், முதல்தடுப்பரணைத் தாண்டி நூறு மீட்டர் கடந்து சென்றோம். துணை இராணுவத்தினர் மீண்டும் வந்து மறித்தனர். மீறி நடந்தோம். அடுத்த தடுப்பை நெருங்கியதும் இங்கே நிற்கவே கூடாது; திரும்பிச் செல்லுங்கள் என்று தடித்தக் குரலில் கத்தினர். அப்போது மோடி அரசைக் கண்டித்து எதிர்க்குரல் எழுப்பினோம் என குறிப்பிட்டுள்ளார்.
முதல்தடுப்பரணைத் தாண்டி நூறு மீட்டர் கடந்து சென்றோம். துணை இராணுவத்தினர் மீண்டும் வந்து மறித்தனர். மீறி நடந்தோம். அடுத்த தடுப்பை நெருங்கியதும் இங்கே நிற்கவே கூடாது; திரும்பிச் செல்லுங்கள் என்று தடித்தக் குரலில் கத்தினர். அப்போது மோடி அரசைக் கண்டித்து எதிர்க்குரல் எழுப்பினோம். pic.twitter.com/GJRITFMuXS
— Thol. Thirumavalavan (@thirumaofficial) February 4, 2021
இது தொடர்பான போட்டோக்கள், வீடியோக்களையும் அவர் ட்விட்டரில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். 100 மீட்டர் தாங்கள் நடந்து செல்வதாகவும், துணை ராணுவத்தினரின் தடுப்புக்களை மீறி செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications