நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் போராட்டம்.. ஜனநாயகப் படுகொலை என சுமித்ரா மகாஜன் ஆவேசம்
டெல்லி : நாடளுமன்றத்தில் எதிர்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி முடக்கி வருவது ஜனநாயகத்தைப் படுககொலை செய்யும் செயல் என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் வேதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய நாளில் இருந்தே எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு அவையை நடத்தவிடாமல் முடக்கி வைத்துள்ளனர்.

லலித் மோடி விவகாரத்தில் சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தரா ராஜே மற்றும் வியாபம் ஊழல் நடைபெற்ற மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் பதவி விலக வேண்டும் என கூறி காங்கிரஸ் உறுப்பினர்கள் கடுமையாக அவையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் .
லலித் மோடி விவகாரத்தில் நாடாளுமன்றத்தை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முடக்கி வருவதற்கு சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இருப்பினும் நாடாளுமன்றத்தில் அமளியே நீடிக்கிறது. இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் எதிர்கட்சிகளின் செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஊடகத்திற்கு அவர் பேட்டியளித்தபோது கூறியதாவது..
நாடாளுமன்ற அமளி காரணமாக ஜனநாயகத்தின் மதிப்பு கெட்டு விட்டது. நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்துவது "ஜனநாயகத்தை படுகொலை செய்யும்செயல்" அனைத்து பிரச்னைகளை பற்றி விவாதிக்க அரசு தயாராக இருந்தது.
கேள்வி நேரத்தையும் ஒத்திவைக்க தயாராக இருந்தேன். மத்திய அரசு நெருக்கடி கொடுத்ததால் தான் காங்கிரஸ் எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என கூறப்படுவது தவறு
440 உறுப்பினர்களின் உரிமையானது 40-50 எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கடத்தப்படுகிறது. இவ்வாறு சுமித்ரா மகாஜன் கூறியுள்ளார்.
முன்னதாக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் போராடியதை நாட்டு மக்கள் காணும் விதமாக ஒளிபரப்பு செய்ய மக்களவை டி.வி.யை அவர் கேட்டுக் கொண்டார்.
பொறுப்பற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களின், நடவடிக்கையை நாட்டு மக்களும் காணும் விதமாக சுமித்ரா கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு












Click it and Unblock the Notifications