நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் போராட்டம்.. ஜனநாயகப் படுகொலை என சுமித்ரா மகாஜன் ஆவேசம்
டெல்லி : நாடளுமன்றத்தில் எதிர்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி முடக்கி வருவது ஜனநாயகத்தைப் படுககொலை செய்யும் செயல் என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் வேதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய நாளில் இருந்தே எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு அவையை நடத்தவிடாமல் முடக்கி வைத்துள்ளனர்.

லலித் மோடி விவகாரத்தில் சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தரா ராஜே மற்றும் வியாபம் ஊழல் நடைபெற்ற மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் பதவி விலக வேண்டும் என கூறி காங்கிரஸ் உறுப்பினர்கள் கடுமையாக அவையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் .
லலித் மோடி விவகாரத்தில் நாடாளுமன்றத்தை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முடக்கி வருவதற்கு சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இருப்பினும் நாடாளுமன்றத்தில் அமளியே நீடிக்கிறது. இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் எதிர்கட்சிகளின் செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஊடகத்திற்கு அவர் பேட்டியளித்தபோது கூறியதாவது..
நாடாளுமன்ற அமளி காரணமாக ஜனநாயகத்தின் மதிப்பு கெட்டு விட்டது. நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்துவது "ஜனநாயகத்தை படுகொலை செய்யும்செயல்" அனைத்து பிரச்னைகளை பற்றி விவாதிக்க அரசு தயாராக இருந்தது.
கேள்வி நேரத்தையும் ஒத்திவைக்க தயாராக இருந்தேன். மத்திய அரசு நெருக்கடி கொடுத்ததால் தான் காங்கிரஸ் எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என கூறப்படுவது தவறு
440 உறுப்பினர்களின் உரிமையானது 40-50 எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கடத்தப்படுகிறது. இவ்வாறு சுமித்ரா மகாஜன் கூறியுள்ளார்.
முன்னதாக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் போராடியதை நாட்டு மக்கள் காணும் விதமாக ஒளிபரப்பு செய்ய மக்களவை டி.வி.யை அவர் கேட்டுக் கொண்டார்.
பொறுப்பற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களின், நடவடிக்கையை நாட்டு மக்களும் காணும் விதமாக சுமித்ரா கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications