பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: ராஜ்யசபாவில் டி.ராஜா கண்டனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்று ராஜ்யசபாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பகவத் கீதையை தேசிய புனித நூலாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Opposition in RS condemns govt’s move on Bhagwat Geeta, Sanskrit language

தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் ராஜ்யசபாவில் இன்று பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா, இந்தியா மிகப்பெரிய நாடு. வேற்றுமைகள் அதிகம் உள்ள நாடு என்பதால் அதனை பலவீனமாக எடுத்துக்கொள்ள கூடாது. சாதகமாக எடுத்துக்கொண்டு நாட்டை வலுப்படுத்த வேண்டும். பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிப்பதை ஏற்க முடியாது. அப்படி அறிவித்தால் இதர மதங்களின் புனித நூலை அவமதிப்பதாகும் என்றார்.

இதேபோல் கேந்திர வித்யாலயாக்களில் சமஸ்கிருத திணிப்புக்கும் டி. ராஜா கண்டனம் தெரிவித்து பேசினார். மேலும் திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்களும் பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க எதிர்ப்புத் தெரிவித்து பேசினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+