ஒபிஎஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் அளித்த புகார் மனுக்களின் நகல் சசிகலாவிடம் ஒப்படைப்பு
ஓபிஎஸ் தரப்பால் தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகார் மனுக்களின நகல் சசிகலாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
பெங்களூரு: அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணியில் அளித்த புகார் மனுக்களின் நகல் சசிகலாவிடம் வழங்கப்பட்டது.
அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை எதிர்த்து ஓபிஎஸ் அணியை சேர்ந்த மைத்ரேயன் உள்ளிட்ட 11 எம்.பிக்கள் கடந்த 16ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் 2 புகார் அளித்தனர். அந்த மனுக்களில் நகல்களை பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு வழங்குமாறு தேர்தல் ஆணையம் மைத்ரேயனுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து அந்த 2 மனுக்களின் நகல்கள் மற்றும் அத்துடன் இணைக்கப்பட்ட ஆவணங்களை மைத்ரேயன் எம்.பி., பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகளிடம் கொடுத்து சசிகலாவிடம் வழங்குமாறு கூறினார். அந்த மனுக்களின் நகல்கள் மற்றும் ஆவணங்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் பின்னர் அதனை சசிகலாவிடம் ஒப்படைத்தனர்.
ஓபிஎஸ் அணி புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் ஏற்கனவே சசிகலாவுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ள நிலையில் தற்போது புகார் நகல்களும் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.