4 மாநில தேர்தல் தோல்விக்கு விலைவாசி காரணமாம் சொல்கிறார் சோனியா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நான்கு மாநில சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததற்கு விலைவாசி உயர்வுதான் காரணம் என்று சோனியாகாந்தி கூறியுள்ளார்.

டெல்லி, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகள் ஞாயிறன்று வெளியானது.

Sonia

அதில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. தேர்தல் முடிவுகள் பற்றி செய்தியாளர்களிடம் சோனியா காந்தி பேசியதாவது:

நான்கு மாநில தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். காங்கிரஸ் கட்சி தோல்விக்கு விலைவாசி உயர்வு காரணம் என்றார்.

காங்கிரஸ் கட்சிக்கு நல்ல தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும், டெல்லி, ராஜஸ்தானில பல திட்டங்களை செயல்படுத்தியும் தோல்வி ஏற்பட்டுள்ளது என்று கூறிய சோனியா, தோல்விக்கான காரணம் குறித்து ஆராயப்படும் என்றார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் வேட்பாளராக ராகுல் அறிவிக்கப்படுவரா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "உரிய சந்தர்ப்பம் வரும்போது, பிரதமர் வேட்பாளராக...‘அவருடைய' பெயர் அறிவிக்கப்படும்" என்று குறிப்பிட்டார்.

பிரதமர் வேட்பாளர் பெயர் என்று பொதுவாக அறிவிக்காமல், அவருடைய பெயர் என்று குறிப்பிட்டு கூறியதால் ராகுல் பெயரை சோனியா சூசகமாக தெரிவித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+