ஹரியானாவில் அங்கீகாரம் இல்லாத 1200 தனியார் பள்ளிகள் மூடல்: அரசு உத்தரவு
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் பல வருடங்களாக மாநிலக் கல்வித்துறையின் அங்கீகாரம் இல்லாமல் நடைபெற்று வரும் 1,200க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளை ஒரு வாரத்திற்குள் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக் கல்வி நிர்வாக இயக்குனரான சந்தர் சேகர் தனது சமீபத்திய சுற்றறிக்கை ஒன்றில் மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு இந்த உத்தரவினை வழங்கியுள்ளார்.
இந்தப் பள்ளிகளை மூடுவதற்கு உள்ளூர் அரசு நிர்வாகம் அல்லது காவல்துறையின் உதவியையும் பெற்றுக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட பள்ளிகளில் அங்கீகாரம் பெறுவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளோ, ஊழியர்களோ இல்லாததினால் அவர்கள் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளவில்லை. இந்த நடவடிக்கை பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்ற உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார்.
இந்தப் பள்ளிகளுக்கு முறைப்படி அங்கீகாரம் பெற்றுக்கொள்ளத் தேவையான பல வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் அவர்கள் அதற்கு முன்வரவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
கல்வி ஆண்டின் இடையில் இந்தப் பள்ளிகள் மூடப்படுவதால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் அனுமதி வழங்குமாறு மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு அரசின் கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
பள்ளிகளை மூடும் நடவடிக்கையால் பாதிக்கப்படும் மாணவர்கள் எண்ணிக்கை குறித்து தங்களுக்குத் தெரியவில்லை என்று கல்வித்துறை அதிகாரிகள் கூறினர். இந்தப் பள்ளிகள் தங்களுடைய மாணவர்களின் எண்ணிக்கையைத் தெரிவித்ததில்லை என்பதே அதற்குக் காரணம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும், அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க வேண்டாம் என்று தாங்கள் முன்னரே பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications