ஜல்லிக்கட்டு புரட்சி: 300 பேர் கைது- 6 அமைப்புகளுக்கு தடை தேவை- 'பொறுக்கி' புகழ் சு.சாமி
டெல்லி: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 300க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாஜக, ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி ட்விட் ஒன்றில் கூறியுள்ளார்.
இன்று மதியம் வெளியிடப்பட்ட அந்த ட்விட்டில், "தமிழகத்திலுள்ள எனக்கு தெரிந்த வட்டார தகவல்கள்படி, சிசிடிவி காட்சிகலை கொண்டு 300 பேரை கைது செய்துள்ளனர். 6 அமைப்புகளுக்கு தடை தேவை" என்று கூறப்பட்டுள்ளது.
இதிலும் கைது செய்யப்பட்டவர்களை வழக்கம்போல பொறுக்கிகள் என்றே குறிப்பிட்டுள்ளார் சு.சாமி. அமைப்புகளையும் பொறுக்கி அமைப்புகள் என குறிப்பிட்டுள்ளார். இதற்கு தக்க எதிர்வினையை டிவிட்டரில் நெட்டிசன்கள் கொடுத்தபடி உள்ளனர்.
Good to know from sources that all over TN, on CCTV footage over 300 Porkis have been arrested by Police. Ban of six Porki outfits needed
— Subramanian Swamy (@Swamy39) January 28, 2017
தமிழக அரசு இன்னும் அறிவிக்காத நிலையில் 300 பேரை கைது செய்துள்ளதாக சு.சாமி கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.