பிரதமர் வேட்பாளராக மோடி... அத்வானியை ஏற்க வைக்க கத்காரி மும்முரம்! சுஷ்மா, எம்.எம். ஜோஷி ஒப்புதல்!
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்க அக்கட்சி முடிவு செய்துவிட்டது. ஆனால் இதை ஏற்க மறுத்து முட்டுக்கட்டை போட்டு வரும் மூத்த தலைவர் அத்வானியை சமாதானப்படுத்த ஆர்.எஸ்.எஸ். தூதராக நிதின் கத்காரி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தீர்மானித்தது. ஆனால் பாஜகவின் மூத்த தலைவர்களான அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து நரேந்திர மோடி எதிர்ப்பாளர்களை தனித்தனியே பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புகளில் சுஷ்மா ஸ்வராஜ், முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் சமாதனமடைந்ததாக தெரிகிறது.

அத்வானி மட்டுமே தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாஜக முன்னாள் தலைவர் நிதின் கத்காரியை ஆர்.எஸ்.எஸ். தமது தூதராக அனுப்பி வைத்தது. அவரும் அத்வானியை டெல்லியில் சந்தித்துப் பேசினார்.
பின்னர் நாக்பூர் சென்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இன்று மீண்டும் நாக்பூரில் இருந்து டெல்லி திரும்பி அத்வானியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதேபோல் மோடியின் சட்ட ஆலோசகராக வருணிக்கப்படும் அருண்ஜேட்லியும் இன்று அத்வானியை சந்தித்து பேசக் கூடும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டால், குஜராத் முதல்வர் பதவி, பாஜகவின் லோக்சபா பிரசார குழுத் தலைவர் பதவி ஆகியவற்றை அவர் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று மோடி எதிர்ப்பாளர்கள் வலியுறுத்துவதாக தெரிகிறது.
அனேகமாக அத்வானி சமாதானமடையாமல் போனாலும் அவரது எதிர்ப்பை மீறி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்படும் என்றே கூறப்படுகிறது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்படுவதற்கு அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா வாழ்த்து தெரிவித்துள்ளது. சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே, நரேந்திர மோடியை தொலைபேசியில் அழைத்து வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார்.
-
ஊருக்கு முன்பே வேட்புமனு தாக்கல் செய்த தஞ்சை பாஜக நிர்வாகி முரளீதரன்! நயினார் எடுத்த ஆக்ஷன்! -
ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி! -
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங்











Click it and Unblock the Notifications