3 வயது சிறுமியை பலாத்காரம் செய்த டெல்லி பிளேஸ்கூல் உரிமையாளரின் மகன்
டெல்லி: டெல்லியில் உள்ள பிளே ஸ்கூலில் 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு டெல்லியில் உள்ள ஹரி நகர் பகுதியில் இருக்கும் பிளே ஸ்கூலுக்கு 3 வயது சிறுமி ஒருவர் சென்று வந்துள்ளார். வெள்ளி்க்கிழமை அவர் ஸ்கூலுக்கு போக மறுத்ததுடன் தனது பிறப்பு உறுப்பில் வலிப்பதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
சிறுமியிடம் கேட்டதற்கு ஸ்கூல் உரிமையாளரின் மகன் தான் தன்னை ஏதோ செய்ததாக அந்த குழந்தை பாவம் போன்று தெரிவித்தது. இதையடுத்து ஸ்கூலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி குற்றவாளியை அடையாளம் காட்டியது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சிறுமியை சீரழித்தவரை கைது செய்தனர்.
அந்த வாலிபர் சிறுமிக்கு சாக்லேட் தருவதாகக் கூறி அவரை பலநாட்கள் பலாத்காரம் செய்து வந்துள்ளார். அந்த ஸ்கூலில் படிக்கும் பிற சிறுமிகளும் பலாத்காரம் செய்யப்பட்டார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்னதாக டெல்லி ரோஹினி பகுதியில் உள்ள பிளே ஸ்கூலில் இரண்டரை வயது சிறுமி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications