ஜனநாயகம் உயிரோடு இருக்க சுதந்திரமான நீதித்துறையே காரணம்: ஜெ.வுக்கு எதிராக வாதாடிய வக்கீல் ஆச்சாரியா
பெங்களூர்: ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாடி முக்கியமான பல திருப்பங்களை வழக்கில் ஏற்படுத்தியவர் முன்னாள் அரசு வக்கீல் வி.எஸ்.ஆச்சாரியா.
இவரை அரசு வக்கீலாக தொடர விடக் கூடாது என்பதற்காக, அதிமுகவின் தூண்டுதலால், அப்போதைய பாஜக தலைமையிலான கர்நாடக அரசு வெகுவாக முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதன்பிறகு பவானிசிங் அரசு தரப்பு வக்கீலாக நியமிக்கப்பட்டார். ஆனால் அவரோ குற்றவாளிகள் தரப்புக்கு சாதகமாக வாதிடுவதாக எதிர்க்கட்சிகளும், சில நேரம் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹாவுமே குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் ஆச்சாரியா இந்த தீர்ப்பு குறித்து நிருபர்களிடம் கூறியதாவது: முதலில் நீதிபதி மைக்கேல் டி. குன்ஹாவை பாராட்ட வேண்டும்.
ஒரு நேர்மையான, திறமையான நீதிபதியை இந்த வழக்கை விசாரிக்க நியமித்து ஹைகோர்ட் தலைமை நீதிபதி வகேலா சிறப்பான முடிவைஎடுத்தார்.
நாட்டில் ஜனநாயகம் நிலைத்திருக்க சுதந்திரமான நீதித்துறைதான் காரணம். அதே நேரம், இந்த வழக்கில் ஜெயலலிதா சார்பில் மேல்முறையீடு செய்ய முடியும். இவ்வாறு ஆச்சாரியா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications