மணலில் கலந்து பத்மநாபசாமி கோவில் நகைகள் கடத்தல்... தஞ்சை நகைக்கடைக்காரர்களுக்குத் தொடர்பு?

திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவிலில் உள்ள ஏ முதல் எப் வரையிலான 6 ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி மதிப்பிலான பொக்கிஷங்கள் இருப்பது தெரிய வந்தது. இந்த பொக்கிஷங்களை மதிப்பிட உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை அமைத்தது.
இந்த நிலையில் கோயில் சொத்துகள் குறித்து முழு விபரங்கள் தெரிவிக்க கோபாலகிருஷ்ணன் என்பவரை உச்ச நீதிமன்றம் நியமித்தது. அவர் கடந்த இரண்டு மாதங்களாக கோயிலில் ஆய்வு நடத்தி சில தினங்களுக்கு முன் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதில் மன்னர் குடுமபத்தினர், கோயில் ஊழியர்கலும் சேர்ந்து கோயில் பொக்கிஷத்தை கடத்தியிருக்கலாம் என்று பரபரப்பை குற்றச்சாட்டை கூறியுள்ளார். மேலும் கோயிலில் இருந்து தங்க நகைகளை கிலோ கணக்கில் மணலில் கலந்து கடத்தியிருக்கலாம் என்றும், இது சில நகை கடை உரி்மையாளர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேலும் கூறுகையில் பத்மநாபசாமி கோயிலில் தஞ்சாவூரை சேர்ந்த சில நகை கடைகளுடன் ஓப்பந்தம் செய்திருந்தனர். இவர்கள் கோயில் நகைகளை பாலிஷ் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கோயில் நகைகளை கிலோகணக்கில் அவர்கள் மணலில் கலந்து கடத்தி சென்றுள்ளனர். இவர்கள் தவறை உணர்ந்தும், பயந்தும் சிறிது நகைகளை கோயில் உண்டியலில் போட்டுள்ளனர்.
நகை பாலிஷ் பணியில் இருந்த ராஜூ என்பவருக்கு மட்டும் 3 கிலோ எடையுள்ள தங்க செயின் உள்பட 20 கிலோ தங்கம் கிடைத்துள்ளது. கோயில் இருந்து எத்தனை கிலோ தங்கம் கடத்தப்பட்டது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த பொக்கிஷம் கடத்தலில் பல முக்கிய பிரமுகர்களுக்கும் தொடர்பு உள்ளது. தவிர கோயில் உண்டியலில் ஏராளமான வெளி நாட்டு பணம் உள்ளது. இதையும் பலர் சுருட்டியுள்ளனர்.
ரகசிய அறையில் இருந்து திருவாங்கூர் அரண்மனைக்கு ஒரு ரகசிய சுரங்க பாதை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சுரங்க பாதை வழியாகவும் நகைகளை கடத்தி சென்றிருக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications