சென்சார் போர்டில் "சங் பரிவார்" உறுப்பினர்கள்: மத்திய அரசு நியமனம்!
டெல்லி: மத்திய சென்சார் போர்டில் இந்துத்துவா சிந்தனை கொண்ட ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதாவைச் சேர்ந்தவர்களாகவே நியமிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமது சீடர்களுக்கு ஆண்மையை அகற்றிய வழக்கை எதிர்கொண்டிருக்கும் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மித் ராம் ரஹீம் சிங் நடித்துள்ள படம் 'மெஸஞ்சர் ஆப் காட்'. இத்திரைப்படத்துக்கு மத்திய தணிக்கை குழு சான்றிதழ் அளிக்க மறுப்பு தெரிவித்தது.
ஆனால் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் படத்துக்கு அனுமதி வழங்கியது. தற்போது நாடு முழுவதும் சீக்கியர்கள் இந்த திரைப்படத்துக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த சர்ச்சையில் மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவான சென்சார் போர்டின் தலைவராக இருந்த லீலா சாம்சன் பதவியை ராஜினாமா செய்தார்.

அவருக்கு ஆதரவாக சென்சார் போர்டின் 9 உறுப்பினர்களும் ராஜினாமா செய்தனர். தற்போது சென்சார் போர்டின் தலைவராக சினிமா தயாரிப்பாளர் பஹ்லாஜ் நிஹாலனி நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் 9 பேர் புதிய உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பஹ்லாஜ் நிஹாலனி 'ஷோலா அவுர் ஷப்னம்', 'அந்கேன்' உள்ளிட்ட திரைப்படங்களை 1990களின் தொடக்கத்தில் தயாரித்தவர். அண்மையில் 'Har Ghar Modi' என்ற தலைப்பில் நரேந்திர மோடிக்கான 6 நிமிட பிரசார வீடியோவை தயாரித்திருந்தார் பஹ்லாஜ் நிஹாலனி.
புதிய சென்சார் போர்டில் இடம்பெற்றுள்ள ரமேஷ் படாங்கே. ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதி. விவேக் என்ற மராத்திய வார இதழின் ஆசிரியர். இந்த ரமேஷ் படாங்கே, 'அடல்ஜி- தி பாத்ஃபைண்டர்' என்ற தலைப்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி புத்தகம் எழுதியுள்ளார்.
பாரதிய ஜனதாவின் பொதுச்செயலர் வாணி திரிபாதி, தொலைக்காட்சி தயாரிப்பாளர் அசோக் பண்டிட், தமிழ் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர், நடிகையும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவருமான ஜீவிதா ராஜசேகர், மோடியை சந்தித்து பா.ஜ.க.வில் இணைந்த தமிழ் நகைச்சுவை நடிகர் எஸ்.வி. சேகர் ஆகியோரும் சென்சார் போர்டு உறுப்பினர்களாக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 'சாணக்யா' தொலைக்காட்சி தொடர், இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை குறித்த பின்ஜார் திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய சந்திர பிரகாஷ் திரிவேதி, லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளராக நிறுத்தப்பட்ட அஸ்ஸாமிய மொழி நடிகர் ஜார்ஜ் பாகெர், குஜராத் மத்திய பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் சயீத் அப்துல் பரி, திரைப்பட வசன கர்த்தாவான மிகிர் பூட்டா ஆகியோரும் சென்சார் போர்டு உறுப்பினர்களாக்கப்பட்டுள்ளனர். இந்த மிகிர் பூட்டா, மோடி பற்றிய வெளிநாடு வாழ் இந்தியர் பற்றிய படத்துக்கு வசனம் எழுதியவரும் கூட.
-
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள்












Click it and Unblock the Notifications