நாளை நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறான் தீவிரவாதி நவீத் யாகூப்
ஜம்மு : உதம்பூர் மாவட்டத்தில் உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி நவீத் யாகூப் நாளை நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க உள்ளான்.
காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது கடந்த 5 ஆம் தேதி தீவிரவாதிகள் 2 பேர் தாக்குதல் நடத்தினர். இதில் 2 வீரர்கள் உயிரிழந்ததுடன், ஒரு தீவிரவாதியும் சுட்டுக்கொல்லப்பட்டான்.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட மற்றொரு தீவிரவாதியான முகமது நவீத் யாகூப் , உயிருடன் பிடிபட்டான். அவனிடம் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் உண்மை கண்டறியும் சோதனை நடத்தி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நவீத் யாகூப்பின் விசாரணைக் காவல் முடிந்ததையடுத்து, அவனை பலத்த பாதுகாப்புடன் ஜம்முவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று தேசிய புலனாய்வு அமைப்பினர் ஆஜர்படுத்தினர்.
அப்போது, தீவிரவாதி நவீத் யாகூப், ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க தயாராக இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவனை 2 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். எனவே, நாளை நீதிபதி முன்னிலையில் நவீத் யாகூப் ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பான் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications