எல்லை தாண்டி வந்து இந்திய ராணுவ வீரரை துண்டு துண்டாக வெட்டி வீசிய பாக். பயங்கரவாதிகள்
ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ வீர்ரை சிறைபிடித்து அவரை கொடூரமாக கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசி வெறியாட்டம் போட்டுள்ளனர் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள்.
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் எல்லை தாண்டி ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்திய ராணுவ வீரர் ஒருவரை பிணைக் கைதியாக பிடித்து துண்டு துண்டாக வெட்டி வீசி கொடூரத்தை அரங்கேற்றியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் எல்லை தாண்டி ஊடுருவினர். அப்போது இந்திய ராணுவத்தினர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தி ஒரு வீரரை சிறைபிடித்தனர்.
பின்னர் அந்த வீரரை கொடூரமாக கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வீசி வெறியாட்டம் போட்டிருக்கின்றனர். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்த வெறித்தனத்தால் எல்லை கிராமங்களில் தொடர்ந்தும் பதற்றம் நீடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications