வாகா எல்லையை மொத்தமாக மூடுகிறோம்.. இந்தியாவுடன் இனி எந்த உறவும் இல்லை.. பாகிஸ்தான் அறிவிப்பு!
Recommended Video
ஸ்ரீநகர்: இந்திய பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் வாகா எல்லையை மூடுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்து இருக்கிறது.
காஷ்மீர் பிரச்சனை தற்போது உச்சகட்ட பரபரப்பில் சென்று கொண்டு இருக்கிறது. காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. அது மட்டுமில்லாமல் ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உள்ளது.

இதனால் காஷ்மீரில் மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. காஷ்மீரில் ஏற்கனவே இந்திய ராணுவம் தொடர்ந்து குவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காஷ்மீர் எல்லையில் தற்போது பதற்றம் நீடித்து வருகிறது. ஏற்கனவே இதில் இந்தியாவை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்து வந்தது.காஷ்மீரில் இந்தியா எடுத்து வரும் நடவடிக்கை விதிகளுக்கு முரணானது.
ஐநாவில் இந்தியா செய்த ஒப்பந்தங்களை இந்திய அரசு தற்போது மீறி உள்ளது. பல ஒப்பந்தங்களை தற்போது இந்தியா முன்னேறி உள்ளது, என்று பாகிஸ்தான் கூறியது.மேலும், இந்தியா நேற்று பிறப்பித்த சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
இல்லையென்றால் இந்தியா கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டும். உடனே இந்தியா காஷ்மீரில் அனைத்து விதமான புதிய சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும், என்று கூறியது.
இந்த நிலையில் புதிய திருப்பமாக காஷ்மீர் எல்லையை மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. அதாவது வாகாவில் இருக்கும் எல்லையை மொத்தமாக மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இனி இந்தியாவிற்கு பஸ் போக்குவரத்து உட்பட எந்த விதமான போக்குவரத்தும் கிடையாது என்றும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
முன்னதாக இந்தியாவுடன் தூதரக மற்றும் ராஜாங்க உறவுகளை நிறுத்துவதாக பாகிஸ்தான் அறிவித்தது. தற்போது வாகா எல்லையையும் மூடுவதாக அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications