பிரிவினைவாதி மஸ்ரத் ஆலமை 'பாக்கு வெத்தலை' வைத்து விருந்துக்கு கூப்பிட்ட பாக்.!
ஸ்ரீநகர்/ டெல்லி: ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாதி மஸ்ரத் ஆலமை தமது நாட்டின் குடியரசு தின விழாவுக்கு அழைத்து இந்தியாவை அதிருப்தி அடைய வைத்துள்ளது பாகிஸ்தான். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இன்று நடைபெற்ற அந்நாட்டின் குடியரசு தின விழாவுக்குத்தான் மஸ்ரத் ஆலம் அழைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் மஸ்ரத் ஆலம் இதில் கலந்து கொள்ளவில்லை.

ஜம்மு காஷ்மீரை தனிநாடாக்கும் பிரிவினைவாதிகளில் மஸ்ரத் ஆலமும் ஒருவர். அண்மையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புதிய அரசு பதவியேற்ற நிலையில் நல்லெண்ண அடிப்படையில் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக முதல்வர் முப்தி முகமது சயீத் அறிவித்திருந்தார்.
முதல் கட்டமாக மஸ்ரத் ஆலம் விடுதலை செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும் மோடி ஆட்சிக் காலத்தில் ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்த போதே மஸ்ரத் ஆலம் விடுதலைக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது எனவும் தகவல்கள் வெளியாகின.
இந்த பஞ்சாயத்து ஓய்ந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர்கள் பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. இருப்பினும் இந்தியாவை சீண்டும் விதமாக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் குடியரசு தின விழாவில் பங்கேற்க ஜம்மு காஷ்மீர் ஹூரியத் மாநாட்டுக் கட்சியின் மிர்வாஸ் உமர் பரூக் அழைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் பிரிவினைவாதி மஸ்ரத் ஆலமையும் பாகிஸ்தான் தூதரகம் அழைத்துள்ளது. பாகிஸ்தானில் குடியரசு தின விழா கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று அந்நாட்டு அரசு இவ்விழாவை கொண்டாடி வருகிறது. இதன்படி பாகிஸ்தானில் குடியரசு தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இருப்பினும் இந்த விழாவில் மஸ்ரத் ஆலம் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்த இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித், பிரச்சினை இல்லாதவற்றை பிரச்சனையாக மாற்றாதீர்கள். மஸ்ரத் ஆலமை அழைத்ததற்கு இந்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்காது என்று கருதுகிறேன் என்றார்.
இதுக்கு பேருதான் குசும்புங்கிறது!!
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications