ஒசாமாவை அமெரிக்கா கொன்றபோது சும்மா இருந்த பாக்.கிற்கு சவுண்ட பாரு: சிவசேனா சீண்டல்
மும்பை: பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கொலைசெய்த போது அமைதியாக இருந்த பாகிஸ்தான் இப்போது ஏன் சவுண்ட் விடுகிறது என்று சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்த அல்கொய்தா தீவிரவாதி ஒசாமா பின்லேடனை, அமெரிக்க ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தி கொலை செய்தது. அப்போது அமெரிக்காவிற்கு எதிராக எந்தஒரு வார்த்தையும் பாகிஸ்தான், கூறவில்லை.
இந்நிலையில் மியான்மரில் புகுந்து இந்திய ராணுவம், தீவிரவாதிகளை சுட்டு கொலை செய்ததை கண்டித்துள்ளது பாகிஸ்தான்.
இதுகுறித்து சிவசேனா தனது கட்சி பத்திரிகையான சாம்னாவில் கூறியுள்ளதாவது: இந்திய ராணுவம் மியான்மரில் எடுத்த அதிரடி நடவடிக்கையில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளாமல், இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வார்த்தைகளை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது.
அமெரிக்க ராணுவ வீரர்கள் உங்களுடைய நாட்டிற்குள் நுழைத்து, பின்லேடனை கொலை செய்தனர். அவனுடைய சடலத்தையும், உடமைகளையும் கொண்டு சென்றனர். அப்போது முற்றிலும் மவுனம் சாதித்தது தொடர்பாக நீங்கள் உடனடியாக உலகிற்கு தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு சிவசேனா பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
"அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் போது எல்லாம் அமைதியாக இருக்கும் பாகிஸ்தான், இப்போது ஏன்? இந்தியாவிற்கு எதிராக தேவையில்லாத வாதங்களை முன்வைக்கிறது," என்று பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. "பாகிஸ்தானில் இருந்து வரும் தீவிரவாதிகளால் இந்தியாவில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொலை செய்யப்படுகிறனர். மியான்மரில் ராணுவம் நடத்திய அதிரடி நடவடிக்கையானது இந்தியா இனி தீவிரவாதத்தை சகித்துக்கொள்ளாது" என்பதை காட்டுகிறது என்றும் சிவசேனா பாராட்டு தெரிவித்துள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications