ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்ந்து பாகிஸ்தானுடனே இருக்கிறது: பரூக் அப்துல்லா கருத்தால் சர்ச்சை !
ஜம்மு: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்ந்து பாகிஸ்தானிடமே இருக்கிறது. ஜம்மு - காஷ்மீர் தொடர்ந்து இந்தியா வசமே இருக்கும் என்று கூறி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா.
இது தொடர்பாக ஜம்முவில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுடனே நீடிக்கும். ஜம்மு காஷ்மீர் தொடர்ந்து இந்தியா வசமே இருக்கும். ஆக்கிரமிப்பு காஷ்மீரை நம்முடன் வைத்துக்கொள்வது சாத்தியமில்லை. பாகிஸ்தானுடன் மூன்று போர்களில் ஈடுபட்ட போதும், ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்ற முடியவில்லை.

இதைத்தான் பல ஆண்டுகளாக கூறிவருகிறேன். ஆனால், என்ன செய்தார்கள்? ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவின் ஒரு பகுதியாக சேர்த்தார்களா? போரினால் அப்பாவி மக்கள் தான் பலியாவர்கள். பேச்சுவார்த்தைதான் தீர்வு என்று கூறினார்..
மேலும் பரூக் அப்துல்லா பேசிகையில், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, என்னிடம் கூறுகையில், நான் பாகிஸ்தான் சென்றிருந்த போது, ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தானே வைத்திருக்கட்டும் என யோசனை கூறியதாகவும், ஆனால், இதனை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றார். தற்போது இதே கொள்கையை வைத்து பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தினால், இதனை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என பரூக் அப்துல்லா தெரிவித்தார்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications