வாகா எல்லையில் தவறுதலாக இந்திய பகுதிக்குள் வந்த பாக். முன்னாள் அமைச்சர் குரேசி
டெல்லி: வாகா எல்லையில் பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சர் ஷா முகமது குரேசி தவறுதலாக உள்ளே நுழைந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வாகா எல்லையின் பாகிஸ்தான் பகுதியில் கடந்த 2-ந் தேதியன்று நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 61 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து வாகா எல்லையை பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சரும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் துணைத் தலைவருமான ஷா முகமது குரேசி கடந்த வியாழன்று பார்வையிட்டார்.
அப்போது பாதுகாப்பு படையினருடன் பேசியபடியே நடந்து வந்த குரேசி, பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி இந்திய பகுதிக்குள் நுழைந்து அங்கு ராணுவ வீரருடன் கை குலுக்கினார். உடனே ஓடி வந்த பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தான் எல்லை என வரையறுக்கப்பட்ட கோட்டைத் தாண்டி குரேசி சென்றுள்ளதை சுட்டிக்காட்டினார்.
இதனை உணர்ந்த குரேசி உடனே பாகிஸ்தான் பகுதிக்குள் திரும்பி வந்து நின்று கொண்டார். அப்போது சிரித்துக் கொண்டே, இந்தியப் பகுதிக்குள் நுழைந்துவிட்டேன் என்று குரேசி கூற அவருடன் இருந்த ஒருவர், அதுவும் விசா இல்லாமல் என்று கூறினார்.
ஒரு சில அடிகளே குரேசி இந்திய பகுதிக்குள் தவறுதலாக நுழைந்திருந்தாலும் இது அந்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ஒருநாட்டின் எல்லைக்குள் ஒரு அடி உரிய அனுமதியின்றி நுழைந்தாலுமே ராணுவம் எல்லை தாண்டியதாக அந்நபரை கைது செய்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications