எல்லையில் அத்துமீறி 6 இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்திய பாக்.: பி.எஸ்.எப். வீரர் பலி
ஜம்மு: போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நவ்கம் செக்டரில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலியானார்.
பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது அத்துமீறி சர்வதேச எல்லைக் கோடு பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.50 மணிக்கு பாகிஸ்தான் ராணுவம் சர்வதேச எல்லைக்கோடு பகுதியில் இருக்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நவ்கம் செக்டரில் அமைந்துள்ள இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது.

இதில் எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் பலியானார். பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இந்நிலையில் ஜம்முவில் உள்ள ஆர்னியா செக்டரில் இருக்கும் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று மாலை 6.52 மணிக்கு துப்பாக்கிச்சூடு நடத்தத் துவங்கினர். அவர்கள் 7.15 மணிவரை தொடர்ந்து தாக்குதல் நடத்தினர்.
சிறிய ரக துப்பாக்கிகளை வைத்து அவர்கள் இந்திய நிலைகள் மீது 25 முதல் 30 ரவுண்ட் தாக்கினர். இதையடுத்து இந்திய ராணுவம் அவர்களை பதிலுக்கு தாக்கியது. அதன் பிறகு பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் இரவு 7.15 மணிக்கு தாக்குதலை துவங்கினர். இதையடுத்து பதிலுக்கு இந்திய ராணுவத்தினர் தாக்கினர். இந்த மோதல் சுமார் 80 நிமிடங்கள் வரை நீடித்து ஒரு வழியாக இரவு 8.35 மணிக்கு முடிந்தது. நேற்று மட்டும் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜம்மு காஷ்மீரில் உள்ள 6 இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
முன்னதாக பாகிஸ்தான் ராணுவம் சர்வதேச எல்லைப் பகுதியில் உள்ள ஜம்மு மாவட்டத்தில் இருக்கும் ஆர்.எஸ். புரா செக்டரில் உள்ள 2 இந்திய நிலைகள் மீது கடந்த மாதம் 22ம் தேதி தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications