தூங்காமல் விழித்திருந்துமா இந்தியாவை தடுக்க முடியலை.. பாகிஸ்தானை ஓட்டும் நெட்டிசன்கள்!
ஜம்மு: குப்புற விழுந்தாலும் மண் ஒட்டவில்லை என்று இன்னமும் வெட்கமே இல்லாமல் சொல்லி திரிகிறது பாகிஸ்தான்!
இன்று விடிகாலை 3.30 மணிக்கு பாகிஸ்தானுக்கு உள்ளேயே புகுந்து பயங்கரவாதிகளின் முகாம்களை சுக்குநூறாக உடைத்தெறிந்துவிட்டு, மீண்டும் நம்ம நாட்டுக்கே ஒரு சிறு காயம் இல்லாமல் விமான படை வீரர்கள் திரும்பி உள்ளனர்.

இதனால் பாதிப்புகள் என்று எடுத்துகொண்டால், 4 முக்கிய தீவிரவாத முகாம்கள் நொறுக்கப்பட்டுள்ளது. 300 பேர் இறந்துள்ளனர். உலக நாடுகள் எல்லாம் பாகிஸ்தானை அன்று சரமாரியாக வசைபாடி தூற்றியதுபோல இன்று இந்தியாவை பாராட்டி வருகின்றனர்.
ஆனால் எங்களுக்கு ஒன்றும் பெரிய பாதிப்பு கிடையாது என்று பாகிஸ்தான் சொல்லி வந்தாலும், இந்தியா மீது போர் தொடுப்பதா, இப்படியே கமுக்கமாக விட்டுவிட்டு சும்மா இருப்பதா என்று மறுபக்கம் குழம்பி வருகிறது.
வெறும் 21 நிமிட தாக்குதலில் இருந்து எழ முடியாமல் தடுமாறி விழுந்து கிடக்கிறது பாகிஸ்தான். இந்த நேரத்தில் அந்த நாட்டு விமானப்படை ஒரு ட்வீட் போட்டுள்ளது. எப்படி தெரியுமா? "நள்ளிரவு 12.06க்கு நாங்கள் விழிப்புடன் இருக்கிறோம். நீங்கள் நிம்மதியாகத் தூங்குங்கள் என்று பாகிஸ்தான் விமானப்படை பதிவிட்டுள்ளது!
இதை வைத்து கிண்டலடித்துக் கொண்டிருக்கின்றனர் சமூக வலைதளங்களில். விழிப்புடன் இருந்துமா தாக்குதலை தடுக்க முடியவில்லை என்று கிண்டல்கள் கேலிகள் ஓடிக் கொண்டுள்ளன.












Click it and Unblock the Notifications