அலி பாய்க்கு வந்த பார்சல்.. காஷ்மீரில் சுற்றி திரிந்த மர்ம டிரோன்.. இந்தியா ராணுவம் சொன்ன ஷாக் தகவல்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சுற்றி திரிந்த மர்ம டிரோன் ஒன்று இன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த டிரோன் குறித்த முக்கிய தகவல்கள் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
லடாக் எல்லையில் இந்தியா சீனா இடையே பதற்றம் நிலவி வருகிறது. அங்கு எப்படி நிலைமை மோசமாக இருக்கிறதோ அதேபோல் இன்னொரு பக்கம் பாகிஸ்தான் காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த ஒரு மாதமாக பாகிஸ்தான் இப்படி தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஒரு பக்கம் பாகிஸ்தான் ராணுவமும், இன்னொரு பக்கம் பாகிஸ்தான் தீவிரவாதிகள், காஷ்மீரில் இருக்கும் தீவிரவாதிகள் அங்கு சதித்திட்டங்களை தீட்டி வருகிறார்கள்.

பாகிஸ்தான் டிரோன்
இந்த நிலையில்தான் ஜம்மு காஷ்மீரில் சுற்றி திரிந்த மர்ம டிரோன் ஒன்று இன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த டிரோன் குறித்த முக்கிய தகவல்கள் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளது. காஷ்மீரில் இருக்கும் கத்துவா என்று இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. யாருக்கும் தெரியாமல் சத்தமின்றி டிரோன் உள்ளே வந்துள்ளது.

சுட்டு வீழ்த்தினார்கள்
இந்த டிரோனை பார்த்ததும் அதை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினார்கள். அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்ட எம் 4 துப்பாக்கிகளை பயன்படுத்தி அதை உடனே அதிரடியாக சுட்டு வீழ்த்தினார்கள். இரண்டு சுற்று குண்டுகளை வைத்து உடனே டிரோனை சுட்டு வீழ்த்தி அதை மீட்டார்கள். பாகிஸ்தான் ராணுவம் மூலம் இந்த டிரோன் அனுப்பப்பட்டுள்ளது என்று இந்திய ராணுவம் தெரிவித்து உள்ளது.

ஏன் இப்படி
காஷ்மீரில் இருக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை அனுப்ப இப்படி செய்துள்ளனர். இந்த டிரோனில் நிறைய ஆயுதங்கள் வெடிகுண்டுகள் இருந்துள்ளது. இதில் அலிபாய் என்று எழுதப்பட்டு இருந்தது. அலிபாய் என்று தீவிரவாதிக்கு அனுப்பப்பட்ட பார்சலாக இது இருக்கும் என்று கூறுகிறார்கள். மொத்தம் 8 அடி நீளம் கொண்ட டிரோன் ஆகும் இது.

எல்லைக்குள் வந்தது
இந்திய எல்லைக்குள் 500 மீட்டர் வரை இது வந்துள்ளது. உடனடியாக அதை சுட்டு வீழ்த்தி இருக்கிறார்கள். பாகிஸ்தான் ராணுவம் பல நாட்களாக இப்படிப்பட்ட டிரோன் பார்சல் முறையை பயன்படுத்தி வருகிறது. காஷ்மீருக்குள் கலகத்தை ஏற்படுத்தும் வகையில் பாகிஸ்தான் இப்படி செய்கிறது. இதனால் தற்போது எல்லையில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications