இந்திய அரசின் பட்ஜெட்டில் ராணுவத்துக்கு அதிக நிதி: அபாய சங்கு ஊதும் பாகிஸ்தான் பத்திரிகை
டெல்லி: இந்திய பட்ஜெட்டில் ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அந்த நாட்டு பத்திரிகை தனது தலையங்கத்தில் பயமுறுத்தியுள்ளது.
நரேந்திரமோடி தலைமையிலான அரசின் முதலாவது பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கடந்த 10ம்தேதி தாக்கல் செய்தார். அப்போது ராணுவத்தை நவீனமாக்க 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.

கதி கலங்கிய பாகிஸ்தான்
இந்த அறிவிப்பால் பாகிஸ்தான் கதி கலங்கிப்போயுள்ளது. அந்த நாட்டின் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றான 'தி நேஷன்' தனது தலையங்கத்தில் பாகிஸ்தான் மக்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் தயாரா?
தலையங்கத்தில் கூறுகையில் "இந்தியா தனது சக்தியை அதிகரித்து காண்பிக்க நிதி ஒதுக்கீட்டை ராணுவத்துக்கு அதிகரித்திருந்தால் அதை பாகிஸ்தான் எப்படி எதிர்கொள்ளப்போகிறது. மின்சாரம், குடிநீர் பிரச்சினைக்கு நடுவே மற்றுமொரு அதிகாரப்போரை இந்தியாவுக்கு எதிராக சந்திக்க பாகிஸ்தான் தாயாராக உள்ளதா. ராணுவத்துக்கு பாகிஸ்தான் அதிக நிதி ஒதுக்கினால் மக்களின் அன்றாட தேவைகளை எப்படி பூர்த்தி செய்யும்.

வீண் செலவா?
ராணுவத்துக்கு அதிக நிதியை ஒதுக்கீடு செய்வது நாட்டின் வளத்தை வீணாக்குவது போலாகும் என்று பிரதமர் நவாஸ் ஷெரிப் கடந்தாண்டு கூறினார். இப்போதும் அதே நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருக்கிறாரா என்பதை நினைவுபடுத்த வேண்டும்.

சீனா மீதான அச்சமும் காரணம்
இந்திய அரசு பாதுகாப்பு துறைக்கு பட்ஜெட்டில் 12 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நரேந்திரமோடி தலைமையிலான அந்த நாட்டு அரசு தேசிய கொள்கையில் அதிக ஈடுபாடு காட்டுவதை இது காண்பிக்கிறது. இந்திய அரசு ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வது பாகிஸ்தான் மீதான அச்சத்தின் காரணமாக மட்டுமாக இருக்காது. சீனா தனது ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதையும் இந்தியா கருத்தில்கொண்டே இதுபோல கூடுதல் நிதி ஒதுக்கியிருக்கும் என்று கருதமுடியும்.

பதிலடி கொடுத்ததை மறந்துவிட்டாரா?
இந்தியாவுடன் நல்ல உறவை மேம்படுத்த நவாஸ் ஷெரிப் மிகவும் பிரயத்தனப்படுவதை போல தெரிகிறது. அதே நேரம், 1998ம் ஆண்டு இந்தியா 5 அணு குண்டு சோதனை நடத்தியதற்கு பதிலடியாக அப்போதைய நவாஸ் ஷெரிப் அரசு 6 முறை அணுகுண்டு சோதனை நடத்தியதை மறந்துவிடக்கூடாது. இவ்வாறு அந்த பத்திரிகை தனது தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications