காஷ்மீர் எல்லையில் 24 மணி நேரத்தில் 8 முறை பாக். ராணுவம் தாக்குதல்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் கடந்த 24 மணி நேரத்தில் 8 முறை பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆர்.எஸ்.புரா செக்டார் பகுதியை இலக்கு வைத்து நேற்று இரவு 8.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை தொடங்கியது. அதன் பின்னர் தொடர்ச்சியாக ராக்கெட்டுகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்கள் மூலம் 5 இந்திய நிலைகளை இலக்கு வைத்து தாக்குதலை தீவிரப்படுத்தியது பாகிஸ்தான். 8 முறை பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.

இதற்கு இந்தியத் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமையன்று 14 இந்திய நிலைகளை இலக்கு வைத்து தாக்குதலை மேற்கொண்டது பாகிஸ்தான்.
கடந்த 2 மாதங்களில் மட்டும் 150க்கும் மேற்பட்ட யுத்த நிறுத்த மீறல்களை பாகிஸ்தான் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் சாட்சியங்கள்
இதனிடையே இன்று சம்பா மாவட்டம் ராம்கர் பகுதியில் பமுசக் என்ற கிராமத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்திய ஷெல்களை போலீசார் கைப்பற்றினர்.
அத்துடன் அதே பகுதியில் ஜெர்டா என்ற கிராமத்தில் வெடிக்காத ஷெல்லையும் போலீசார் செய்தியாளர்களிடம் காண்பித்தனர்.












Click it and Unblock the Notifications