எங்கப்பா ஒரு அப்பாவி: சொல்வது சாமியார் ராம் ரஹீம் சிங்கின் வளர்ப்பு மகள் ஹனி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சாமியார் ராம் ரஹீம் சிங் அப்பாவி என்று அவரின் வளர்ப்பு மகள் ஹனிப்ரீத் இன்சான் தெரிவித்துள்ளார்.
2 பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ராம் ரஹீம் சிங் சிறையில் உள்ளார். இந்நிலையில் அவரின் வளர்ப்பு மகளான ஹனிப்ரீத் இன்சான் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

ராம் ரஹீம் குறித்து ஹனி கூறியிருப்பதாவது,
என் அப்பா ஒரு அப்பாவி. என் அப்பா சிறைக்கு சென்றதும் என் உலகமே இடிந்துவிட்டது. நான் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னை பற்றியும், அப்பா பற்றியும் பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றார்.
சுமார் ஒரு மாத காலமாக தலைமறைவாக இருந்த ஹனிப்ரீத் கடந்த வாரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications