பெற்றோரை இழிவாக பேசும் பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பலாம்.. டெல்லி ஹைகோர்ட் அதிரடி
தரக்குறைவாக இழிவுபடுத்தும் விதமாக விமர்சிக்கும் பிள்ளைகளை வீட்டில் இருந்து வெளியேற்ற பெற்றோர்களுக்கு உரிமை உண்டு என டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
டெல்லி: பெற்றோர்களை தரக்குறைவாக இழிவுபடுத்தும் விதமாக விமர்சிக்கும் பிள்ளைகளை வீட்டில் இருந்து வெளியேற்ற பெற்றோர்களுக்கு உரிமை உண்டு என டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
மூத்த குடிமக்கள் பராமரிப்பு தீர்ப்பாயமானது பெற்றோர் பராமரிப்பு தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த முன்னாள் போலீஸ் அதிகாரி மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக தீர்ப்பளித்தது. அந்த உத்தரவில். போலீஸ் அதிகாரி மற்றும் சகோதரர்களுக்கு பெற்றோரின் சொத்துக்களும் இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் போலீஸ் அதிகாரியும் அவரது சகோதரரும் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மன்மோகன் அளித்த தீர்ப்பு:
வயதான பெற்றோர்கள் வாழும் வீட்டில், அவர்களுடன் வசித்து வரும் பிள்ளைகள் தரக்குறைவாக இழிவுபடுத்தி விமர்சித்தால் அவர்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பலாம். மூத்த குடிமக்கள் அமைதியாகவும் , பாதுகாப்பாகவும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்பதை இந்த நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
பெற்றோரை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கொடுமைபடுத்தும் பிள்ளைகளை, வாடகை வீட்டில் இருந்தாலும் சரி அல்லது சொந்த வீட்டில் இருந்தாலும் சரி அவர்களை வெளியேற்ற பெற்றோர்களுக்கு உரிமை உள்ளது. மூத்த குடிமக்களின் வாழ்வு மற்றும் சொத்துக்களை பாதுகாக்க ஒரு நல்ல செயல் திட்டத்தை வடிவமைத்து, ஏற்கனவே உள்ள சட்ட விதிகளில் திருத்தம் செய்ய டெல்லி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி மன்மோகன் உத்தரவிட்டார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications