பெற்றோரை இழிவாக பேசும் பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பலாம்.. டெல்லி ஹைகோர்ட் அதிரடி
தரக்குறைவாக இழிவுபடுத்தும் விதமாக விமர்சிக்கும் பிள்ளைகளை வீட்டில் இருந்து வெளியேற்ற பெற்றோர்களுக்கு உரிமை உண்டு என டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
டெல்லி: பெற்றோர்களை தரக்குறைவாக இழிவுபடுத்தும் விதமாக விமர்சிக்கும் பிள்ளைகளை வீட்டில் இருந்து வெளியேற்ற பெற்றோர்களுக்கு உரிமை உண்டு என டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
மூத்த குடிமக்கள் பராமரிப்பு தீர்ப்பாயமானது பெற்றோர் பராமரிப்பு தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த முன்னாள் போலீஸ் அதிகாரி மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக தீர்ப்பளித்தது. அந்த உத்தரவில். போலீஸ் அதிகாரி மற்றும் சகோதரர்களுக்கு பெற்றோரின் சொத்துக்களும் இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் போலீஸ் அதிகாரியும் அவரது சகோதரரும் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மன்மோகன் அளித்த தீர்ப்பு:
வயதான பெற்றோர்கள் வாழும் வீட்டில், அவர்களுடன் வசித்து வரும் பிள்ளைகள் தரக்குறைவாக இழிவுபடுத்தி விமர்சித்தால் அவர்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பலாம். மூத்த குடிமக்கள் அமைதியாகவும் , பாதுகாப்பாகவும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்பதை இந்த நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
பெற்றோரை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கொடுமைபடுத்தும் பிள்ளைகளை, வாடகை வீட்டில் இருந்தாலும் சரி அல்லது சொந்த வீட்டில் இருந்தாலும் சரி அவர்களை வெளியேற்ற பெற்றோர்களுக்கு உரிமை உள்ளது. மூத்த குடிமக்களின் வாழ்வு மற்றும் சொத்துக்களை பாதுகாக்க ஒரு நல்ல செயல் திட்டத்தை வடிவமைத்து, ஏற்கனவே உள்ள சட்ட விதிகளில் திருத்தம் செய்ய டெல்லி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி மன்மோகன் உத்தரவிட்டார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications