உ.பி.யில் கொடூரம்: 6 வயது மகளை கொன்று வீட்டில் புதைத்த தம்பதி
உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு தம்பதி தங்களது 6 வயது மகளை கொன்று
வீட்டிலேயே புதைத்துள்ளனர்.
மொரதாபாத்: உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு தம்பதி தங்களது 6 வயது மகளை
கொன்று வீட்டிலேயே புதைத்துள்ளனர்.

மொரதாபாத் போலீசாருக்கு கிடைத்த புகாரை அடுத்து ஆனந்த் பால் என்பவரின்
வீட்டை சோதனை செய்தனர். அப்பொழுது அவர்களது 6 வயது மகள் தாராவின் உடல்
அவர்களின் வீட்டின் தரையை தோண்டி புதைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் தங்களது மகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் எலும்பு
நோயுடன் இருந்ததாகவும், பல மருந்துகள் கொடுத்தும் பயனில்லாததால் ஒரு
சாமியாரை அணுகியதாகவும், அவரின் அறிவுரைப்படி கொன்று புதைத்ததாகவும்,
அவ்வாறு செய்தால் அடுத்த குழந்தை நல்ல படியாக இருக்கும் என்று கூறியதால்
தங்களது மகளை கழுத்தை நெறித்து கொன்றதாகவும் கூறியுள்ளனர்.
தாராவின் பாட்டி கூறுகையில், தன் மகள் அவளின் மகள் தாரா மீது மிக அன்புடன்
இருந்ததாகவும் அதனால் அவளை பிரிய மனம் இல்லாமல் அவளின் உடலை வீட்டிலேயே
புதைத்து வைத்து வணங்கி வந்தாள் என கூறியுள்ளார்.
பிரேத பரிசோதனையில் சிறுமியின் வயிற்றில் உணவு ஏதும் இல்லை என்றும் அவர்
கழுத்து நெறித்து கொல்லப்பட்டுள்ளார் என்றும் கண்டுபிடித்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications