அம்மா, அப்பா பிரிந்துவிட்டார்களே: கவலையில் தூக்கில் தொங்கிய 13 வயது மகள்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் தந்தையும், தாயும் பிரிந்து வாழ்வதை தாங்கிக் கொள்ள முடியாமல் 13 வயது சிறுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள மதநாயகனஹல்லியில் இருக்கும் கொல்லாரஹத்தியைச் சேர்ந்தவர் பூர்ணிமா. அவரது கணவர் ஸ்ரீதர். அவர்களின் மகள் தனுஷா(13). குடிப்பழக்கம் உள்ள ஸ்ரீதருக்கும், பூர்ணிமாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

இதையடுத்து பூர்ணிமா தனது மகள் தனுஷாவுடன் கொல்லாரஹத்தியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். கொல்லாரஹத்தியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்த தனுஷா தனது பெற்றோர் பிரிந்து வாழ்வதை நினைத்து கவலையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அதிகாலையில் அவர் வீட்டுக்கு அருகில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் எழுந்த பூர்ணிமா வீட்டுக்கு அருகில் உள்ள மரத்தில் தனது ஒரே மகள் பிணமாகத் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+