பஞ்சாப்பில் ஆம் ஆத்மி அதகளம்.. திமுக நிலையில் அகாலிதளம்
2011 சட்டசபை தேர்தலில் இப்படித்தான், திமுகவும் எதிர்க்கட்சியாக கூட ஆக முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது அதிமுக ஆளும் கட்சியாகவும், அதன் கூட்டணி கட்சியான தேமுதிக எதிர்க்கட்சியாகவும் பதவிக்கு வந்தது.
சண்டீகர்: பஞ்சாப்பில் முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி கட்சி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது.
நடந்து முடிந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 22 தொகுதிகளை வென்று எதிர்க்கட்சியாக வடிவமெடுத்துள்ளது. ஆனால் ஆளும் கட்சியாக இருந்த, பாஜக மற்றும் ஷிரோன்மணி அகாலிதளம் கூட்டணி 18 தொகுதிகளை மட்டுமே பெற்று 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

1997க்கு பிறகு அகாலி தளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் இப்போதுதான் முதல் முறையாகயாக எதிர்க்கட்சி தலைவராகவும் ஆக முடியால் போனது. காங்கிரஸ் கட்சியின் அமரிந்தர் சிங் முதல்வராகவும், நவ்ஜோத்சிங் சித்து துணை முதல்வராகவும் பதவியேற்க உள்ளனர்.
2011 சட்டசபை தேர்தலில் இப்படித்தான், திமுகவும் எதிர்க்கட்சியாக கூட ஆக முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது அதிமுக ஆளும் கட்சியாகவும், அதன் கூட்டணி கட்சியான தேமுதிக எதிர்க்கட்சியாகவும் பதவிக்கு வந்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications