மிஸ்டர் மோடி... ஆர்.எஸ்.எஸ். 'ஷாகா'வைப் போல நாடாளுமன்றத்தை நடத்த முடியாது.. ராகுல் பதிலடி!
புவனேஸ்வரம்: ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தும் 'ஷாகா' எனப்படும் பயிற்சி வகுப்புகளைப் போல நாடாளுமன்றத்தை நடத்த முடியாது என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 400 எம்.பி.க்கள் ஆதரிக்கும் திட்டங்களை காங்கிரஸ் கட்சியின் சதிகார 40 எம்.பி.க்கள் முடக்குகிறார்கள்; நாட்டின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் கட்சி தடை போடுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று குற்றம்சாட்டியிருந்தார்.
Meeting the PCC Executive at Congress Bhawan in Bhubaneshwar pic.twitter.com/zIVpkEn6On
— Office of RG (@OfficeOfRG) September 11, 2015 இதற்கு பதிலளிக்கும் வகையில் ஒடிஷாவின் புவனேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் ராகுல்காந்தி நேற்று கூறியதாவது:
விவாதம் நடத்துவதற்கான கட்டமைப்புதான் நாடாளுமன்றம் என்பதை பா.ஜ.க. தலைமையிலான அரசு உணர வேண்டும். எதிர்க்கட்சிகளின் குரலையும், கருத்துகளையும் கேட்டறியாமல் எதையும் செயல்படுத்தி விட முடியாது.
நாடாளுமன்றம் செயல்பட வேண்டுமானால் விவாதம் நடைபெறுவதும் அவசியம். அதை ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்களான 'ஷாகா' போன்றெல்லாம் நடத்திவிட முடியாது.
ஓர் எதிர்க்கட்சியாக தனது கருத்துகளை நாடாளுமன்றத்தில் பதிவு செய்ய காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால் பா.ஜ.க. அதை அனுமதிப்பதில்லை.
சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாவில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்க வேண்டுமென்றால் முறையான விவாதங்கள் நடைபெற வேண்டும். அதை முழுமையாக அமல்படுத்துவதற்கு 2 ஆண்டுகள் தேவைப்படும்.
இவ்வாறு ராகுல் கூறினார்.












Click it and Unblock the Notifications