கடற்படை நிகழ்ச்சியில் நடிகை கங்கனாவுக்கு என்ன வேலை?: அமைச்சர் பாரிக்கர் விளக்கம்
விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் நடக்கும் சர்வதேச கடற்படை கண்காட்சி துவக்க விழாவில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், நடிகை கங்கனா கலந்து கொண்டது குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் விளக்கம் அளித்துள்ளார்.
சர்வதேச கடற்படை கண்காட்சி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சனிக்கிழமை துவங்கியது. முன்னதாக கண்காட்சியின் துவக்க விழாவில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மற்றும் நடிகை கங்கனா ரனாவத் நடனம் ஆடினர். கடற்படை நிகழ்ச்சியில் அவர்களுக்கு என்ன வேலை என்ற கேள்வி எழுந்தது.
அக்ஷய் மற்றும் கங்கனா கண்காட்சியின் பிராண்ட் அம்பாசிடர்கள் என்று செய்தி வெளியாகின. இந்நிலையில் இது குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் இன்று கூறுகையில்,
பிராண்ட் அம்பாசிடர்கள் அந்த பிராண்டை பிரபலப்படுத்த வேண்டும். அக்ஷய் மற்றும் கங்கனா பிராண்ட் அம்பாசிடர்கள் இல்லை. அவர்கள் அந்த நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினர்கள். அவர்களுடன் எந்த ஒப்பந்தமும் போடவில்லை, அவர்களுக்கு பணமும் அளிக்கவில்லை. அவர்கள் வெறும் விருந்தினர்கள் தான் என்றார்.