பாஸ் ஆனா தான் என் ஆளு பேசுவா..500ஐ வச்சுகிட்டு பண்ணி விடுங்க..ஆன்சர் பேப்பரில் அலற விட்ட ஸ்டூடண்ட்ஸ்
பெங்களூர்: கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவுற்றிருக்கும் நிலையில் விடைத்தாள்களை திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் சிலரது கோரிக்கைகள் இணையதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. நீங்கள் என்னை பாஸ் செய்ய வைத்தால்தான் என் காதல் தொடரும் எனவும், ஒரு மாணவர் ஐநூறு ரூபாய் பணத்தை விடைத்தாளில் வைத்து டீ செலவுக்கு வச்சுக்கோங்க.. பாஸ் பண்ணி விடுங்க என கேட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை சிலபஸ் போல ஒவ்வொரு மாநிலத்திற்கும் பல கல்வி திட்டங்கள் இருக்கிறது. அதே நேரத்தில் 10 மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் பொது தேர்வுகளாக நடத்தப்படுகிறது. இதில் கிடைக்கும் முடிவுகள் தான் அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.
ஆனால் சிலர் இன்னும் ஒன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு தேர்வுகளைப் போலவே பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளையும் எதிர்கொண்டு வருகிறார்கள் போல.. அப்படித்தான் நடந்திருக்கிறது கர்நாடக மாநில மாணவர்கள் சிலரின் ஆன்சர் பேப்பரை பார்க்கும் போது..

சமீபத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது விடைத்தாள்களை திருத்தும் பணியானது நடைபெற்று வருகிறது. விரைவில் அதன் முடிவுகளும் வெளியாக உள்ளன. இந்த நிலையில் கர்நாடக மாநில மாணவர்கள் சிலரின் செயல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது. அதில் சில மாணவர்கள் தன்னை எப்படியாவது தேர்வில் தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளோடு அந்த விடைத்தாளில் 500 ரூபாய் தாளை இணைத்து வைத்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள சிகோடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாளை திருத்திக் கொண்டிருந்த ஆசிரியர் தான் இதை கண்டுபிடித்திருக்கிறார்கள். சுவாரஸ்யமாக ஒரு மாணவர் தனது காதலை இணைத்து கோரிக்கை வைத்திருக்கிறார். "தயவு செய்து என்னை தேர்ச்சி பெறச் செய்யுங்கள். என் காதல் உங்கள் கைகளில் தான் இருக்கிறது. நான் தேர்ச்சி பெற்றால் மட்டுமே என் காதலை தொடர முடியும்" எனக் கோரிக்கை வைத்திருக்கிறார்.
இன்னொரு மாணவர், 500 ரூபாய் தாளை விடைத்தாளில் வைத்து "டீ குடித்துக் கொள்ளுங்கள். தயவு செய்து என்னை பாஸ் ஆக்கி விடுங்கள்" என கோரிக்கை விடுத்திருக்கிறார். மற்றொருவரோ "நீங்கள் என்னை தேர்ச்சி பெற வைத்தால் நான் உங்களுக்கு பணம் தருகிறேன்" என்றும், இன்னொரு மாணவர் "நீங்கள் என்னை தேர்ச்சி பெற வைக்கவில்லை என்றால் என் பெற்றோர் என்னை காலேஜுக்கு அனுப்ப மாட்டார்கள். என்னுடைய எதிர்காலம் இந்த தேர்ச்சியில் தான் உள்ளது" என கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். தற்போது மாணவர்களின் விடைத்தாள்களும் அவர்களது கோரிக்கையும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications