ஒடிசாவில் தடம் புரண்ட பயணிகள் ரயில்.. மாடு குறுக்கே வந்ததால் விபரீதம்.. ஆனா மிகப்பெரிய ஆறுதல்!
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் பயணிகள் ரயில், மாட்டின் மீது மோதி தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் இல்லை.
ஒடிசா மாநிலம் ஜகர்சுகுடா - சம்பல்பூர் இடையே பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல் இந்த ரயில் ஜகர்சுடாவில் இருந்து புறப்பட்டு சம்பல்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த போது மாடு தண்டவாளத்தின் குறுக்கே வந்ததால் மாடு மீது மோதிய வேகத்தில் ரயில் தடம்புரண்டது.

தண்டவாளத்தை விட்டு, ரயிலின் சக்கரம் சில அடிகள் கீழே இறங்கியது. என்ஜினில் இருந்து நான்காவது பெட்டியின் சக்கரங்கள் கீழே இறங்கின. உடனடியாக சுதாரித்த ஓட்டுநர், ரயிலை நிறுத்தியுள்ளார். இதனால், ரயில் கவிழாமல் தப்பியுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்சேதம் இல்லை. தகவலறிந்த ரயில்வே போலீசார் உடனடியாக அப்பகுதிக்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மருத்துவ உபகரணங்களுடன் மறுசீரமைப்புக்கான நிவாரணப் பொருட்களைக் கொண்ட விபத்து நிவாரண ரயில் உடனடியாக அந்த இடத்தை அடைந்தது. ரயில் சக்கரம் தடம்புரண்ட தண்டவாளம் சீரமைக்கப்பட்டது. இதையடுத்து, 2 மணி நேரத்திற்குப் பிறகு, ரயில், 30 கி.மீ வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் தண்டவாளத்தில் பொருத்தப்பட்டு இயக்கத்தை தொடங்கியது.
#WATCH | Odisha | A passenger train, on its way from Jharsuguda to Sambalpur, derailed this evening near Sarala after hitting one cattle in Sambalpur district.
— ANI (@ANI) November 8, 2023
Divisional Railway Manager, Sambalpur and his team reached the spot and carried out restoration work. Accident Relief… pic.twitter.com/ymriWgxBA2
கடந்த ஜூன் மாதம் ஒடிசா மாநிலம் பாலசோரில் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் சுமார் 300 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பீகார் மாநிலம் பாட்னா அருகிலும், ஆந்திர பிரதேச மாநிலம் விசாகபட்டினம் அருகிலும் ரயில் தடம் புரண்டு விபத்துகள் ஏற்பட்டு பலர் பலியாகினர். இந்நிலையில், இன்று ஒடிசா மாநிலத்தில் ரயில் தடம் புரண்ட நிலையில், உயிர் சேதம் ஏதும் இல்லாதது அனைவருக்கும் நிம்மதி அளித்துள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications