ஜெய்ப்பூரில் சென்னை ரயில் தடம் புரண்டது - அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர்
Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் சென்னை-ஜெய்ப்பூர் ரயில் திடீரென்று தடம் புரண்டதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சந்திப்பு ரயில் நிலைய பகுதியில் நேற்று சென்னை-ஜெய்ப்பூர் ரயில் வந்து கொண்டிருந்தது. ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்துக்குள் ரயில் நுழையும் போது, அதன் எஞ்ஜினில் உள்ள 2 சக்கரங்கள், தண்டவாளத்தை விட்டு கீழிறங்கி தடம் புரண்டது.

இதனால் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சுமார் அரை மணி நேரத்துக்குள் தண்டவாளம் சரி செய்யப்பட்டு ரயில் பாதை சீரமைக்கப்பட்டது. பின்னர் அந்த ரயில் மீண்டும் புறப்பட்டு சென்றது.












Click it and Unblock the Notifications