For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொல்கத்தா மெட்ரோ ரயில் நிலைய நகரும் படிக்கட்டில் சிக்கி 9 பயணிகள் காயம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

கொல்கத்தா: கொல்கத்தா மெட்ரோ ரெயில் நிலையம் ஒன்றின் நகரும் படிக்கட்டில் தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக ஏற்பட்ட விபத்தில் 9 பயணிகள் காயம் அடைந்தனர்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கீரிஷ் பார்க் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள நகரும் படிக்கட்டில் நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் பயணிகள் மேல்நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென மேல்நோக்கி சென்றுக்கொண்டிருந்த நகரும் படிக்கட்டுகள் எதிர் திசையில் கீழ்நோக்கி நகரத் தொடங்கியது.

passengers injured in escalator accident in kolkata metro station

இதனால் நகரும் படிக்கட்டில் இருந்த பயணிகள் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் 3 பேருக்கு தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இவர்கள் மூன்று பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர். தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் காயமடைந்தவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும் இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
Passengers injured in escalator accident at Girish Park metro station in kolkata
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X