பதன்கோட் தாக்குதல்: விமானப்படை தளத்தில் பணியாற்றும் யாரேனும் உதவினரா?: என்ஐஏ விசாரணை
டெல்லி: பதன்கோட் தாக்குதல் வழக்கில் விமானப்படை தளத்தில் உள்ள யாராவது உதவி செய்திருக்கிறார்களா என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமானப் படை தளத்திற்குள் கடந்த மாதம் 2ம் தேதி தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 7 பேர் பலியாகினர். தாக்குதல் நடத்திய 6 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகளில் இரண்டு பேர் தாக்குதல் நடத்துவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே விமானப்படை தளத்திற்குள் நுழைந்தது தெரிய வந்துள்ளது. 4 தீவிரவாதிகள் ஜனவரி 2ம் தேதி விமானப்படை தள சுவரில் ஏறி உள்ளே குதித்துள்ளனர்.
தீவிரவாதிகள் 60 கிலோ எடை கொண்ட வெடிபொருட்கள், ஆயுதங்களுடன் எப்படி உள்ளே நுழைந்தனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. தீவிரவாதிகளுக்கு விமானப்படை தளத்தில் இருந்து யாராவது உதவியிருக்கிறார்களா என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.
தீவிரவாதிகள் விமானப்படை தளத்திற்கு தீ வைக்க திட்டமிட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அங்கிருந்த விமானங்கள் மீது வீச வெடிமருந்துகளை கூட எடுத்து வந்துள்ளனர். தீவிரவாதிகள் விமானப்படை தளத்திற்கு அருகே வெடி பொருட்களை இரண்டு நாட்களாக வைக்க யாராவது உதவியிருக்கக்கூடும். அந்த நபர் விமானப்படை தளத்தில் உள்ளவரா என்று விசாரணை நடந்து வருகிறது.
இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு பலரிடம் விசாரித்துக் கொண்டிருக்கிறது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications