Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீவிரவாதிகளுக்கு பதன்கோட் விமானப்படை தளத்தில் உள்ள யாராவது உதவி செய்தார்களா?

Subscribe to Oneindia Tamil

பதன்கோட்: பதன்கோட் விமானப்படை தளத்தில் உள்ளவர்கள் யாராவது தீவிரவாதிகளுக்கு உதவி செய்தார்களா என்று தேசிய புலனாய்வு நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது.

பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமானப்படை தளத்திற்குள் புகுந்த 6 தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 7 பேர் பலியாகினர், 20 பேர் காயம் அடைந்தனர். மூன்று நாட்களாக நடந்த தாக்குதலில் 6 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Pathankot terror attack: Did terrorists get help from inside the airbase?

அவ்வளவு பாதுகாப்பான விமானப்படை தளத்திற்குள் தீவிரவாதிகள் எப்படி நுழைந்தார்கள் என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஒரு சம்பவத்தால் விமானப்படை தளத்தில் உள்ள யாராவது தீவிரவாதிகளுக்கு உதவி செய்திருப்பார்களோ என்ற சந்தேகம் தேசிய புலனாய்வு நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது.

2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் இருக்கும் விமானப்படை தளத்திற்குள் இரண்டு பிரிவுகளாக சென்ற தீவிரவாதிகள் சரியாக குறிப்பிட்ட இடத்தில் சந்தித்துள்ளனர். பரந்து விரிந்த விமானப்படை தளத்தில் குறிப்பிட்ட இடத்தில் சந்திப்போம் என்று கூறி தீவிரவாதிகள் சந்தித்துள்ளது அங்குள்ள யாரோ அவர்களுக்கு உதவி செய்திருப்பார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து விமானப்படை தளத்தில் உள்ள யாராவது உதவி செய்தார்களா என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு நிறுவனம் விசாரித்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+