பாட்னா குண்டுவெடிப்பு: 18 குண்டுகளை வெடிக்க திட்டமிட்டிருந்தனர் தீவிரவாதிகள்?
பாட்னா: பீகார் மாநிலம் பாட்னாவில் பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பொதுக்கூட்டத்தில் 18 குண்டுகளை வெடிக்க வைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாட்னாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தொடர் குண்டுகள் வெடித்தன. நரேந்திர மோடியின் கூட்டம் நடந்த காந்திமைதானத்தின் அருகேயும் குண்டுகள் வெடித்தன. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். 83 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதைதொடர்ந்து நடந்த சோதனையில் வெடிக்காத சில குண்டுகளும் கண்டு எடுக்கப்பட்டன. இதையடுத்து இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய 3 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் பயங்கரவாத அமைப்பான இந்தியன் முஜாஹிதீனுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அத்துடன் பாட்னா ரயில் நிலையத்தில் 10 வது பிளாட்பார்மில் உள்ள கழிவரையில் ஒன்று கூடி நகர் முழுவதும் 18 குண்டுகளை வைக்க திட்டமிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications