பாட்னா குண்டுவெடிப்பு தீவிரவாதிகள் நேபாளத்துக்கு தப்பி ஓட்டம்?
டெல்லி: பாட்னா தொடர் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாதிகள் நேபாளத்துக்கு தப்பி ஓடியிருக்கலாம் என்று பீகார் போலீசாருக்கு தேசிய புலனாய்வு ஏஜென்சி தகவல் அனுப்பியுள்ளது.
குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி, பாட்னாவில் கலந்து கொண்ட கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இதில் 9 பேர் பலியாகினர்.100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டு அவர்கள் தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்தோர் என்ற குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டனர். முக்கிய தீவிரவாதிகளை கைது செய்ய தேசிய புலனாய்வு ஏஜென்சி தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்நிலையில் இந்திய-நேபாள எல்லையில் பீகார் மாநில மாவட்டங்களில் பாட்னா குண்டுவெடிப்பில் தொடர்புடைய நான்கு அல்லது ஐந்து தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும் அனேகமாக அவர்கள் நேபாளத்துக்கு தப்பி செல்லலாம் என்றும் தேசிய புலனாய்வு ஏஜென்சி தகவல் அனுப்பியிருக்கிறது.
இதைத் தொடர்ந்து நேபாள எல்லையோர பீகார் மாவட்டங்களில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications