நான் மராட்டிய முதல்வர் வேட்பாளரல்ல... தொண்டர்களின் கோரிக்கையை நிராகரித்தார் சரத்பவார்
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராகப் போவதில்லை எனக் கூறி தொண்டர்களின் கோரிக்கையை அக்கட்சியின் தலைவர் சரத்பவார் நிராகரித்துள்ளார்.
வருகிற செப்டம்பர் - அக்டோபர் மாதவாக்கில் மராட்டிய மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரை இத்தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மராட்டிய முதல்வராக சுமார் ஆறரை ஆண்டுகள் பதவியில் இருந்த சரத்பவார், அதன்பிறகு தேசிய அரசியலுக்கு சென்று விட்டார். அவர் தேசிய அரசியலுக்கு சென்று 19 ஆண்டுகள் ஆகி விட்டது.
இந்நிலையில், தொண்டர்கள் சரத்பவார் மீண்டும் மாநில அரசியலுக்கு வர வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் தொண்டர்களின் கோரிக்கையை சரத்பவார் நிராகரித்து விட்டார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 15-வது ஆண்டு தின விழாவில் இது தொடர்பாக சரத்பவார் கூறியதாவது, ‘நான் முதல்வர் வேட்பாளர் அல்ல, ஒருங்கிணைந்த தலைமையின் கீழ் தேர்தலை சந்திக்க வேண்டும்' என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது டெல்லி ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கும் தான், அதிலேயே திருப்தி அடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications