ரூ.15 ஆயிரம் செலுத்தி பசுவை தத்தெடுக்கலாம்.. ராஜஸ்தான் அரசு புதுத்திட்டம்
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆண்டுக்கு ரூ. 15 ஆயிரத்தை செலுத்தி பசுவை தத்தெடுத்து வளர்க்கும் திட்டத்தை ராஜஸ்தான் அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பசுக்களை விரும்பும் பொதுமக்கள் ஆண்டுக்கு ரூ.15000 செலுத்தி பசுவை தத்தெடுத்துக் கொள்ளும் முறையை மாநிலஅரசு அறிமுகப்படுத்தியது.
உத்தரப்பிரதேசத்தை அடுத்து ராஜஸ்தான், உத்தரகாண்ட், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களில் சட்டவிரோதமாக இயங்கி வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாட்டிறைச்சிக் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பசுக்களை பராமரிப்பதற்காக தனித் துறை உருவாக்கப்பட்டு அதற்கு அமைச்சர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாநில மக்கள் பசுக்களை வளர்க்க விரும்பினால் ஆண்டுக்கு ரூ.15,000 செலுத்தி கோ சாலையில் இருந்து ஒரு பசுவை தத்தடெுத்து வளர்க்கலாம் என மாநில அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டமானது மாநில முதல்வர் வசுந்தரா ராஜேவின் சொந்த தொகுதியில்
அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவில் இத்திட்டம் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வரின் தொகுதியில் 11 பேர் இதுவரை இத்திட்டத்தில் இணைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications